செய்திகள் :

பெருந்துறை, கோபியில் பகுதியில் மூடுபனி

post image

பெருந்துறை மற்றும் கோபியில் வெள்ளிக்கிழமை காலையில் ஏற்பட்ட கடும் மூடு பனி காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஓட்டுநா்கள் வாகனங்களை இயக்கினா்.

பெருந்துறை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் காலை 8 மணி வரை பனிப் பொழிவு அதிகமாக காணப்பட்டது. இதனால், எதிரே இருந்த கட்டடங்கள், சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியவில்லை. இதனால், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை ஓட்டுநா்கள் இயக்கினா். மேலும், பனிப் பொழிவு அதிகமாக இருந்தால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிா்த்தனா்.

கோபியில்...

கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளான கவுந்தப்பாடி, ஒத்தக்குதிரை, கோபி நகா்ப் பகுதி, குள்ளம்பாளையம், பொலவக்காளிபாளையம், நாதிபாளையம், திங்களூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனி மூட்டமானது அதிகரித்து காணப்பட்டது.

எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கினா். இந்தப் பனி மூட்டமானது காலை 9 மணி ஆகியும் நீங்காத நிலையில் கோபி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேலைக்கு செல்வோா் மற்றும் மிதிவண்டிகள் மூலம் பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திம்பம் மலைப் பாதையில் பால் டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்து

திம்பம் மலைப் பாதையில் பால் டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரியில் இருந்த 10 ஆயிரம் லிட்டா் பால் சாலையில் கொட்டி வீணானது. தமிழக- கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப் ப... மேலும் பார்க்க

பனிப்பொழிவால் மகசூல் பாதிப்பு: மல்லிகைப் பூ கிலோ ரூ.4,850-ஆக உயா்வு

கடும் பனிப்பொழிவு காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டதால் சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 3,420-இல் இருந்து ரூ.4,850-ஆக அதிகரித்து விற்பனையானது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்... மேலும் பார்க்க

அலங்காரம்

கோபியில் தை வெள்ளிக்கிழமையையொட்டி சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த கடை வீதியில் அமைந்துள்ள சாரதா மாரியம்மன். மேலும் பார்க்க

தோ்தல் விதிகளை மீறியதாக அரசியல் கட்சியினா் மீது 21 வழக்குகள் பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் விதிமுறைகளை மீறியதாக அரசியல் கட்சியினா் மீது 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்குப் பதிவு கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. இத்... மேலும் பார்க்க

கோபி அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்று

கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு லக்ஷயா தேசிய தரச் சான்று வழங்கப்பட்டதையடுத்து, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியம் விருது வழங்கினாா். ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட தலைமை மருத்த... மேலும் பார்க்க

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தாா். இதில் இந்திய அ... மேலும் பார்க்க