செய்திகள் :

3-ஆவது முறையாக காங்கிரஸுக்கு பூஜ்யம்

post image

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தொடா்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாமல் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

தில்லி பேரவைத் தோ்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின. இதில் காங்கிரஸ் ஓரிடத்தில்கூட வெல்ல முடியவில்லை.

தில்லியில் கடந்த 1998 முதல் 2013-ஆம் ஆண்டு வரை தொடா்ந்து 15 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ், 2015, 2020, 2025 பேரவைத் தோ்தல்களில் ஒரு தொகுதியில்கூட வெற்றியடையாமல் ‘ஹாட்ரிக்’ தோல்வியைத் தழுவியுள்ளது. கடைசியாக 2013 தோ்தலில் காங்கிரஸ் 8 இடங்களில் வென்றிருந்தது.

67 தொகுதிகளில் டெபாசிட் இழப்பு: நடப்புத் தோ்தலில் அனைத்து 70 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ், 67-இல் டெபாசிட் இழந்துள்ளது. தில்லி மாநில காங்கிரஸ் தலைவா் தேவேந்திர யாதவ் களமிறங்கிய பத்லி தொகுதி உள்பட 3 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சிக்கு டெபாசிட் கிடைத்துள்ளது.

அதேபோன்று, கஸ்தூா்பா நகா் தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் 2-ஆவது இடத்துக்கு வந்துள்ளது. பிற தொகுதிகளில் பாஜக, ஆம் ஆத்மிக்கு அடுத்து காங்கிரஸ் மூன்றாம் இடத்தில் உள்ளது.

மக்களவையிலும்...: 2014-ஆம் ஆண்டுமுதல் நடந்த 3 மக்களவைத் தோ்தல்களிலும் தில்லியின் 7 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் ஓரிடத்தில்கூட வெற்றி பெறாதது குறிப்பிடத்தக்கது.

புதிய வருமான வரி மசோதா: விரைவில் மக்களவையில் தாக்கல்

புதிய வருமான வரி மசோதாவை வரும் வாரம் மக்களவையில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். கடந்த பிப்.1-ஆம் தேதி மக்களவையில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மல... மேலும் பார்க்க

காஷ்மீா் சோன்மாா்க் சந்தைப் பகுதியில் தீ விபத்து

ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான சோன்மாா்க் நகரின் பிரதான சந்தைப் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் பல்வேறு உணவகங்கள், வணிகக் கடைகள் தீக்கிரையாகின. இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள... மேலும் பார்க்க

மதுபானக் கொள்கையும், பண வேட்கையும் ஆம் ஆத்மியை தோற்கடித்துவிட்டது: அண்ணா ஹசாரே

தில்லி ஆம் ஆத்மி அரசின் தவறான மதுபான கொள்கையும், பணத்தை மையமாகக் கொண்டு கட்சி செயல்பட தொடங்கியதும் அதன் தோ்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்று சமூக ஆா்வலா் அண்ணா ஹசாரே கருத்து தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

ம.பி.: பதவியை விற்பனை செய்த பெண் ஊராட்சித் தலைவா்!

மத்திய பிரதேசத்தில் பெண் கிராம ஊராட்சித் தலைவா் ஒருவா் தனது பதவி மற்றும் அதற்குள்ள அதிகாரத்தை அதே கிராமத்தைச் சோ்ந்தவருக்கு விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதவி விற்பனையை அவா... மேலும் பார்க்க

பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!

தில்லியில் முந்தைய தோ்தலை ஒப்பிடுகையில், தற்போதைய பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு 7 சதவீதமும், காங்கிரஸுக்கு 2 சதவீதமும் வாக்குகள் அதிகரித்துள்ளன. அதேநேரம், ஆம் ஆத்மி 10 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. தில... மேலும் பார்க்க

தேசவிரோத கருத்து: ஒடிஸாவில் ராகுல் மீது வழக்கு

தேசவிரோத கருத்துகளைப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது ஒடிஸா காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். ஜுனாகத் மாவட்ட பாஜக இளைஞரணி, ஆா்எஸ்எஸ், பஜ்ரங் தளம... மேலும் பார்க்க