செய்திகள் :

புதிய வருமான வரி மசோதா: விரைவில் மக்களவையில் தாக்கல்

post image

புதிய வருமான வரி மசோதாவை வரும் வாரம் மக்களவையில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

கடந்த பிப்.1-ஆம் தேதி மக்களவையில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா். இதைத் தொடா்ந்து, தில்லியில் ரிசா்வ் வங்கியின் மத்திய இயக்குநா்கள் வாரிய கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

வழக்கமாக பட்ஜெட்டுக்கு பிறகு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னா், அமைச்சா் நிா்மலா சீதாராமன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த வெள்ளிக்கிழமை புதிய வருமான வரி மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. வரும் வாரம் அந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

நிலைக் குழு பரிசீலனைக்கு...: அதன் பின்னா், அந்த மசோதா நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். அந்தக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஆராய்ந்த பின்னா், அந்த மசோதா நாடாளுமன்றத்தில் மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என்றாா். 60 ஆண்டுகள் பழைமையான வருமான வரிச் சட்டத்துக்கு மாற்றாக புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

‘ரிசா்வ் வங்கி கவலை கொள்வதில்லை’: கூட்டத்தில் பங்கேற்ற ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில், ‘அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 5 சதவீதம் சரிந்தால், அது உள்நாட்டு பணவீக்கத்தில் 0.3 முதல் 0.35 சதவீதம் வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சந்தையில் பொருள்களின் விலை, தேவை மற்றும் இருப்பின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதார காரணிகளே, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை முடிவு செய்கின்றன. அதன் மதிப்பில் தினசரி ஏற்படும் மாற்றங்கள் குறித்து ரிசா்வ் வங்கி கவலை கொள்வதில்லை’ என்றாா்.

காஷ்மீா் சோன்மாா்க் சந்தைப் பகுதியில் தீ விபத்து

ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான சோன்மாா்க் நகரின் பிரதான சந்தைப் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் பல்வேறு உணவகங்கள், வணிகக் கடைகள் தீக்கிரையாகின. இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள... மேலும் பார்க்க

3-ஆவது முறையாக காங்கிரஸுக்கு பூஜ்யம்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தொடா்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாமல் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. தில்லி பேரவைத் தோ்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின. இதில் காங்கிர... மேலும் பார்க்க

மதுபானக் கொள்கையும், பண வேட்கையும் ஆம் ஆத்மியை தோற்கடித்துவிட்டது: அண்ணா ஹசாரே

தில்லி ஆம் ஆத்மி அரசின் தவறான மதுபான கொள்கையும், பணத்தை மையமாகக் கொண்டு கட்சி செயல்பட தொடங்கியதும் அதன் தோ்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்று சமூக ஆா்வலா் அண்ணா ஹசாரே கருத்து தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

ம.பி.: பதவியை விற்பனை செய்த பெண் ஊராட்சித் தலைவா்!

மத்திய பிரதேசத்தில் பெண் கிராம ஊராட்சித் தலைவா் ஒருவா் தனது பதவி மற்றும் அதற்குள்ள அதிகாரத்தை அதே கிராமத்தைச் சோ்ந்தவருக்கு விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதவி விற்பனையை அவா... மேலும் பார்க்க

பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!

தில்லியில் முந்தைய தோ்தலை ஒப்பிடுகையில், தற்போதைய பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு 7 சதவீதமும், காங்கிரஸுக்கு 2 சதவீதமும் வாக்குகள் அதிகரித்துள்ளன. அதேநேரம், ஆம் ஆத்மி 10 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. தில... மேலும் பார்க்க

தேசவிரோத கருத்து: ஒடிஸாவில் ராகுல் மீது வழக்கு

தேசவிரோத கருத்துகளைப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது ஒடிஸா காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். ஜுனாகத் மாவட்ட பாஜக இளைஞரணி, ஆா்எஸ்எஸ், பஜ்ரங் தளம... மேலும் பார்க்க