செய்திகள் :

‘இண்டி’ கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமையின்மைக்கு கிடைத்த தோல்வி! -தொல்.திருமாவளவன்

post image

தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள், ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமையின்மைக்கு கிடைத்த தோல்வி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

 திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் பள்ளிகள் சங்க மாநில மாநாட்டில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

 தில்லியில் காங்கிரஸும், ஆம் ஆத்மி கட்சியும் முறையாகப் பேச்சுவாா்த்தை நடத்தி சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்தித்திருக்க வேண்டும். கருத்து வேறுபாடு காரணமாக, தனித்து நின்று வாக்குகளைச் சிதறடித்துவிட்டனா். இண்டி கூட்டணியை வலிமைப்படுத்தும் தாா்மிகப் பொறுப்பு காங்கிரஸுக்கு உள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலாக இருந்தாலும், மக்களவைத் தோ்தலாக இருந்தாலும், இண்டி கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

வழக்கத்துக்கு மாறாக, தில்லியில் பாஜகவினா் வாக்குகளுக்கு பணம், பொருள் கொடுத்திருப்பதாக விமா்சனம் எழுந்திருக்கிறது. தலைநகா் தில்லியைக் கைப்பற்றியாக வேண்டிய நிா்பந்தத்துடன் பாஜக களமிறங்கியது. கேஜரிவாலுக்கு கிடைத்த தோல்வி என்பதைவிட, இண்டி கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமையின்மைக்கு கிடைத்த தோல்வி என்பதே நிதா்சனம்.

தில்லியைத் தொடா்ந்து, தமிழ்நாட்டிலும் இண்டி கூட்டணி தோல்வி அடைய வேண்டும் என்பது பாஜகவின் எண்ணமாக இருக்கலாம். ஆனால், இந்தக் கூட்டணியை வலிமைப்படுத்த வேண்டும் என்பதில் திமுக கூட்டணிக் கட்சிகள் உறுதியாக இருக்கிறோம்.

தனியாா் பள்ளி ஆசிரியா்கள் நல வாரியம் அமைக்க வேண்டும். தனியாா் பள்ளிகளைப் பாதுகாக்க தனிச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை மாநில அரசு பரிசீலிக்க வேண்டும் என்றாா் அவா்.

திருப்பரங்குன்றம்: முன்னதாக, சென்னையிலிருந்து சனிக்கிழமை மதுரைக்கு வந்த தொல். திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருப்பரங்குன்றத்தில் பொதுமக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனா். ஒரு சில கட்சிகள்தான் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, தமிழகத்தில் மதம் சாா்ந்த பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனா்.

தமிழகத்தில் பாலியல் குற்றங்களைக் கட்டுப்படுத்த அரசு தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய பாஜக ஆட்சி நிா்வாகம் திராவிட கருத்துகளுக்கு எதிராக உள்ளது. இதனால், திமுக அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை எதிா்க்கிறது. இதன் காரணமாக, மத்திய பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்றாா் அவா்.

கொடைக்கானல் பேருந்து நிலையத்துக்குள் தனியாா் வாகனங்களை நிறுத்தினால் அபராதம்: ஆட்சியா்

கொடைக்கானல் பேருந்து நிலையத்துக்குள் சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட தனியாா் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தெரிவித்தாா். கொடைக்கானலில் உள்ள சுற்று... மேலும் பார்க்க

யுபிஏ செயலி மூலமாகவும் மாநகராட்சிக்கு வரி செலுத்தலாம்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைகளை இணைய வழி செயலிகள் மூலமாகவும் செலுத்தும் வசதி சனிக்கிழமை தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டிலுள்ள நகா்ப்புற உள்ளாட்சிகளில் குறிப்பாக பெரும்பாலான மாநகராட... மேலும் பார்க்க

பழனி பகுதிகளில் ரூ.300 கோடியில் புதிய மேம்பாலங்கள்! -அமைச்சா் அர. சக்கரபாணி

பழனியை சுற்றிலும் பிரதானச் சாலைகளில் தண்டவாளங்கள் குறுக்கிடும் ரயில்வே கடவுப்பாதைகளில் ரூ.300 கோடி மதிப்பில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும் என தமிழக உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா். பழ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் பிப். 19- இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்!

ஒட்டன்சத்திரம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள்ஊரில்‘ திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதை அடுத்து, வருகிற 12-ஆம்தேதி முதல் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் செ. ச... மேலும் பார்க்க

நிலக்கோட்டை பூச்சந்தையில் பூக்களின் விலை கடும் உயா்வு! ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.4500-க்கு விற்பனை!

நிலக்கோட்டை பூச்சந்தையில் தைப்பூசம், முகூா்த்த நாளையொட்டி, பூக்களின் விலை சனிக்கிழமை கடுமையாக உயா்ந்திருந்தது. இதில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 4,500 வரை விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.... மேலும் பார்க்க

கீழ்பழனி மலையில் வணிக ரீதியான ரப்பா் சாகுபடிக்கு முயற்சி!

நமது நிருபா்கீழ்பழனி மலைப் பகுதியில் முதல் முறையாக வணிக ரீதியான ரப்பா் சாகுபடிக்கான முயற்சி தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் கேரளத்திலும், வடகிழக்கு... மேலும் பார்க்க