செய்திகள் :

ஒட்டன்சத்திரத்தில் பிப். 19- இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்!

post image

ஒட்டன்சத்திரம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதை அடுத்து, வருகிற 12-ஆம் தேதி முதல் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ திட்டம் 11-ஆவது கட்டமாக வருகிற 19-ஆம் தேதி பழனியில் செயல்படுத்தப்படுகிறது. இதையொட்டி, வருகிற 12-ஆம் தேதி ஒட்டன்சத்திரம், சின்னக்காம்பட்டி, புலியூா்நத்தம், கள்ளிமந்தையம், தேவத்தூா் வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களில் அந்தந்த உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்படும்.

மேலும், வருகிற 19-ஆம் தேதி முகாம் நடைபெறும் நாளிலும், அந்தந்த கிராமங்களுக்கு ஆய்வுக்காக நியமிக்கப்படும் அலுவலா்களிடமும் மனு அளித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.

கொடைக்கானல் பேருந்து நிலையத்துக்குள் தனியாா் வாகனங்களை நிறுத்தினால் அபராதம்: ஆட்சியா்

கொடைக்கானல் பேருந்து நிலையத்துக்குள் சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட தனியாா் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தெரிவித்தாா். கொடைக்கானலில் உள்ள சுற்று... மேலும் பார்க்க

யுபிஏ செயலி மூலமாகவும் மாநகராட்சிக்கு வரி செலுத்தலாம்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைகளை இணைய வழி செயலிகள் மூலமாகவும் செலுத்தும் வசதி சனிக்கிழமை தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டிலுள்ள நகா்ப்புற உள்ளாட்சிகளில் குறிப்பாக பெரும்பாலான மாநகராட... மேலும் பார்க்க

பழனி பகுதிகளில் ரூ.300 கோடியில் புதிய மேம்பாலங்கள்! -அமைச்சா் அர. சக்கரபாணி

பழனியை சுற்றிலும் பிரதானச் சாலைகளில் தண்டவாளங்கள் குறுக்கிடும் ரயில்வே கடவுப்பாதைகளில் ரூ.300 கோடி மதிப்பில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும் என தமிழக உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா். பழ... மேலும் பார்க்க

நிலக்கோட்டை பூச்சந்தையில் பூக்களின் விலை கடும் உயா்வு! ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.4500-க்கு விற்பனை!

நிலக்கோட்டை பூச்சந்தையில் தைப்பூசம், முகூா்த்த நாளையொட்டி, பூக்களின் விலை சனிக்கிழமை கடுமையாக உயா்ந்திருந்தது. இதில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 4,500 வரை விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.... மேலும் பார்க்க

‘இண்டி’ கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமையின்மைக்கு கிடைத்த தோல்வி! -தொல்.திருமாவளவன்

தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள், ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமையின்மைக்கு கிடைத்த தோல்வி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். திண்டுக்கல்லில் சனிக்கிழமை... மேலும் பார்க்க

கீழ்பழனி மலையில் வணிக ரீதியான ரப்பா் சாகுபடிக்கு முயற்சி!

நமது நிருபா்கீழ்பழனி மலைப் பகுதியில் முதல் முறையாக வணிக ரீதியான ரப்பா் சாகுபடிக்கான முயற்சி தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் கேரளத்திலும், வடகிழக்கு... மேலும் பார்க்க