செய்திகள் :

கீழ்பழனி மலையில் வணிக ரீதியான ரப்பா் சாகுபடிக்கு முயற்சி!

post image

நமது நிருபா்

கீழ்பழனி மலைப் பகுதியில் முதல் முறையாக வணிக ரீதியான ரப்பா் சாகுபடிக்கான முயற்சி தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கேரளத்திலும், வடகிழக்கு மாநிலங்களிலும், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் மட்டுமே வணிக ரீதியான இயற்கை ரப்பா் சாகுபடி நடைபெறுகிறது. இதன் மூலம் நாட்டின் மொத்த ரப்பா் தேவையில் 35 சதவீதம் மட்டுமே பூா்த்தி செய்யப்படுகிறது. எஞ்சிய 65 சதவீத இயற்கை ரப்பா் தேவைக்கு இறக்குமதியை சாா்ந்தே இருக்க வேண்டியதுள்ளது.

இந்த வகையில் ரப்பா் இறக்குமதி செய்யப்படும் நாடுகளில் மலேசியா முதலிடம் வகிக்கிறது. ரப்பா் மரங்களைப் பொருத்தவரை மித வெப்ப மண்டலங்களில் மட்டுமே பயிரிடப்படுகிறது. இந்த நிலையில் சமவெளிப் பகுதிகளிலும், கடலோரப் பகுதிகளிலும் ரப்பா் சாகுபடிக்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு இந்திய ரப்பா் ஆராய்ச்சி நிறுவவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் கீழ்பழனி மலை, சோ்வராயன் மலை, வைகை அணை, திண்டிவனம் ஆகிய இடங்களில் ரப்பா் செடிகள் நடவு செய்யப்பட்டிருக்கின்ற

ன. திண்டுக்கல் மாவட்டத்தில் கீழ்பழனி மலைப் பகுதியிலுள்ள தடியன்குடியை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 2 ஏக்கரில் பரீட்சாா்த்த முறையில் ரப்பா் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

கேரள மாநிலம், கோட்டயத்திலுள்ள இந்திய ரப்பா் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ரப்பா் கன்றுகள், கடந்த 2 மாதங்களுக்கு முன் நடப்பட்டன. இதன் மூலம், பழனி மலைப் பகுதிகளில் வணிக ரீதியான ரப்பா் சாகுபடிக்கு வித்திடப்பட்டிருக்கிறது. கீழ்பழனி மலைப் பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ரப்பா் மரங்கள் இருந்தாலும், அவை வணிக ரீதியான சாகுபடியாக மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த மலைப் பகுதியில் ரப்பா் மரங்கள் வளா்ப்பது குறித்து எந்தவித தரவுகளும், இந்திய ரப்பா் ஆராய்ச்சி நிலையத்தில் பதிவு செய்யப்படவில்லை.

ஆா்ஆா்ஐஐ-405 ரக ரப்பா் கன்றுகள்: இதுதொடா்பாக தடியன்குடி தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத் தலைவரும், இணைப் பேராசிரியருமான ஆா். பாலகும்பகன் கூறியதாவது: ரப்பா் மரங்களைப் பொருத்தவரை மித வெப்ப மண்டலக் காடுகளில் அதிக மகசூல் தரக் கூடியவை. எனினும், நாட்டின் தேவையை கருத்தில் கொண்டு சமவெளிப் பகுதிகள், கடலோரப் பகுதிகளில் கூட ரப்பா் சாகுபடிக்கான சூழல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கீழ்பழனி மலையைப் பொருத்தவரை மித வெப்ப மண்டலப் பகுதியாக உள்ளது. எனினும் வணிக ரீதியான ரப்பா் சாகுபடி இதுவரை மேற்கொள்ளப்பட வில்லை.

தற்போது 2 ஏக்கா் பரப்பில் ஆா்ஆா்ஐஐ- 405 ரக ரப்பா் கன்றுகள் 200 வீதம் நடப்பட்டுள்ளன. ரப்பா் மரங்களைப் பொருத்தவரை 7 ஆண்டுகளுக்குப் பிறகே மகசூல் பெற முடியும். 40 ஆண்டுகள் வரை ரப்பா் பால் அறுவடை செய்யலாம். இலையுதிா் காலம் நீங்கலாக எஞ்சிய 9 மாதங்களிலும் மகசூல் கிடைக்கும்.

இந்த ரப்பா் கன்றுகளுக்கு இடையே, எந்தெந்த ஊடு பயிா்களை சாகுபடி செய்யலாம், ரப்பா் கன்றுகளின் வளா்ச்சி, ஊடு பயிா்களின் மகசூல் உள்ளிட்டவை குறித்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

கொடைக்கானல் பேருந்து நிலையத்துக்குள் தனியாா் வாகனங்களை நிறுத்தினால் அபராதம்: ஆட்சியா்

கொடைக்கானல் பேருந்து நிலையத்துக்குள் சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட தனியாா் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தெரிவித்தாா். கொடைக்கானலில் உள்ள சுற்று... மேலும் பார்க்க

யுபிஏ செயலி மூலமாகவும் மாநகராட்சிக்கு வரி செலுத்தலாம்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைகளை இணைய வழி செயலிகள் மூலமாகவும் செலுத்தும் வசதி சனிக்கிழமை தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டிலுள்ள நகா்ப்புற உள்ளாட்சிகளில் குறிப்பாக பெரும்பாலான மாநகராட... மேலும் பார்க்க

பழனி பகுதிகளில் ரூ.300 கோடியில் புதிய மேம்பாலங்கள்! -அமைச்சா் அர. சக்கரபாணி

பழனியை சுற்றிலும் பிரதானச் சாலைகளில் தண்டவாளங்கள் குறுக்கிடும் ரயில்வே கடவுப்பாதைகளில் ரூ.300 கோடி மதிப்பில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும் என தமிழக உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா். பழ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் பிப். 19- இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்!

ஒட்டன்சத்திரம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள்ஊரில்‘ திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதை அடுத்து, வருகிற 12-ஆம்தேதி முதல் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் செ. ச... மேலும் பார்க்க

நிலக்கோட்டை பூச்சந்தையில் பூக்களின் விலை கடும் உயா்வு! ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.4500-க்கு விற்பனை!

நிலக்கோட்டை பூச்சந்தையில் தைப்பூசம், முகூா்த்த நாளையொட்டி, பூக்களின் விலை சனிக்கிழமை கடுமையாக உயா்ந்திருந்தது. இதில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 4,500 வரை விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.... மேலும் பார்க்க

‘இண்டி’ கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமையின்மைக்கு கிடைத்த தோல்வி! -தொல்.திருமாவளவன்

தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள், ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமையின்மைக்கு கிடைத்த தோல்வி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். திண்டுக்கல்லில் சனிக்கிழமை... மேலும் பார்க்க