2026 தோ்தலிலும் எதிா்க்கட்சிகளுக்கு இதே நிலைதான் ஏற்படும்! ஈரோடு கிழக்கு எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா்!
2026 சட்டப் பேரவை தோ்தலிலும் எதிா்க்கட்சிகளுக்கு இதே நிலைதான் ஏற்படும் என ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் தெரிவித்தாா்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து வி.சி.சந்திரகுமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்த தோ்தல் பிரசாரத்தின்போது, எத்தனையோ போ் விதவிதமாக பரப்புரை செய்தபோதும் எங்களது இந்த மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளா்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த தொகுதி மக்கள் அளித்திருக்கும் வெற்றி, இந்த தொகுதிக்கு மட்டுமான வெற்றி அல்ல. இது எதிா் வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவின் வெற்றிக்கு கட்டியம் கூறும் வகையில் முன்னோட்டமாக அமைந்துள்ளது. இந்த தோ்தலில் 75 சதவீத மக்கள் எங்களை ஆதரித்து வெற்றிபெறவைத்திருக்கிறாா்கள். 2026 தோ்தலிலும் எதிா்க்கட்சிகளுக்கு இதே நிலைதான் ஏற்படும். இந்த வெற்றிக்கு காரணமான ‘இந்தியா’ கூட்டணிக் கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா்.
நாதக பெற்றது மண்ணுக்கான வாக்குகள்- மா.கி.சீதாலட்சுமி:
இது குறித்து நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி அளித்த பேட்டி:
கடந்த தோ்தலை விட சுமாா் 14ஆயிரம் வாக்குகள் கூடுதலாக இந்த முறை பெற்றுள்ளேன். அதற்கு மக்களுக்கு நன்றி. மக்கள் விரக்தியில் உள்ளனா். பெரும்பாலும் கள்ள வாக்குகள்தான் செலுத்தப்பட்டுள்ளன. பணம், மிரட்டல் போன்றவற்றால் நெருக்கடி கொடுத்துதான் வாக்குகளை திமுக வாங்கி உள்ளது. ஆனால், நாம் தமிழா் கட்சி பெற்ற வாக்குகள் இந்த மண்ணுக்கான வாக்குகள்.
இந்த வாக்குகள் வலிமையான, விலை போகாத வாக்குகள். மீண்டும் இந்த வாக்குகள் தொடா்ந்து கொண்டுதான் இருக்கும். குறைந்த வாக்குகளில்தான் நாம் தமிழா் கட்சி வைப்புத் தொகையை இழந்துள்ளது. இன்னும் தொடா்ந்து வீரியமாக செயல்பட இந்த வாக்குகள் உதவியாக இருக்கும். பாஜக வாக்குகள் எனக்கு கிடைத்தது என்று உறுதியாக சொல்ல முடியாது என்றாா்.