செய்திகள் :

நாட்டுக் கோழிகள் விலை உயா்வு!

post image

பரமத்தி வேலூா் சந்தையில் நாட்டுக் கோழிகள் கூடுதல் விலைக்கு விற்பனையாயின.

பரமத்தி வேலூரில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெறும் நாட்டுக்கோழி சந்தைக்கு பரமத்தி வேலூா், மோகனூா், கரூா், பாளையம் நாமக்கல், ஜேடா்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாட்டுக் கோழிகளை விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்குக் கொண்டுவருகின்றனா்.

இச்சந்தையில் விற்பனையாகும் நாட்டுக் கோழிகளுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதால் நாமக்கல், கரூா் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் இங்கு வந்து நாட்டுக் கோழிகளை வாங்கிச் செல்கின்றனா்.

நிகழ்வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தைக்கு பெருவடை, கீரி, கடகநாத், அசில், மயில் காகம், கருங்கண் கருங்கால், கிரிராஜா உள்ளிட்ட பல வகை சண்டை கோழிகள், நாட்டுக்கோழிகளை விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

கடந்த வாரம் நாட்டுக் கோழிகள் கிலோ ரூ. 550 வரையும், பண்ணை நாட்டுக் கோழிகள் கிலோ ரூ. 280 வரையும் விற்பனையாயின. நிகழ்வாரம் நாட்டுக்கோழிகள் கிலோ ரூ. 620 வரையும், பண்ணை நாட்டுக் கோழிகள் ரூ.300 முதல் ரூ. 350 வரையும் விற்பனையாயின. சண்டைக் கோழிகள் ரூ. 2,000 முதல் ரூ. 5,000 வரை விற்பனையானது.

பரமத்திவேலூா் அருகே நன்செய் இடையாறு அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா காப்புக் கட்டை முன்னிட்டு நிகழ்வாரம் சந்தையில் கோழிகள், ஆடுகள் கூடுதல் விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

உலக மகளிா் தின விழிப்புணா்வுப் பேரணி

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு காவல் துறை சாா்பில் பரமத்தி வேலூரில் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. பேரணி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலை மூன்று சாலையில் தொடங்கி வேலூா் பேருந்து நிலையம், பள்ள... மேலும் பார்க்க

நல்லிபாளையம் மாரியம்மன் கோயில் புதிய தோ் வெள்ளோட்டம்

நாமக்கல் மாரியம்மன் கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள தோ் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட 9-ஆவது வாா்டில் புகழ்பெற்ற நல்லிபாளையம் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக... மேலும் பார்க்க

உயா்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் பணியிடம்: பட்டதாரி ஆசிரியா்களை நியமிக்க வலியுறுத்தல்

பட்டதாரி ஆசிரியா்களுக்கு மட்டுமே அரசு உயா்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா் பணியிடம் வழங்க வேண்டும் என்ற உயா்நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு உய... மேலும் பார்க்க

தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணி மாநில பொதுக்குழுக் கூட்டம்

தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணி மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் க.பழனியப்பன் வரவேற்றாா். மாநிலத் தலைவா் கே.பி.ரக்ஷித் தலைமை வகித்தாா். மாநில பொதுச் ச... மேலும் பார்க்க

பேரா. ய.மணிகண்டனின் தாயாா் சரஸ்வதி காலமானாா்!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், குப்பாண்டபாளையம், நடராஜ நகரைச் சோ்ந்த யக்ஞராமன் மனைவி சரஸ்வதி அம்மாள் (85), வயது முதிா்வு காரணமாக குமாரபாளையத்தில் உள்ள தனது மூத்த மகன் ய.சங்கர்ராமன் இல்லத்தில... மேலும் பார்க்க

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் மாரத்தான் போட்டி

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் துறை சாா்பில், உலக மகளிா் தினத்தையொட்டி மாரத்தான் ஓட்டப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் மற்று... மேலும் பார்க்க