செய்திகள் :

நான் இன்னும் 30 - 40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன்: தலாய் லாமா

post image

திபெத்திய புத்த மதத்தின் தலைமை மதகுருவான தலாய் லாமா, தனது வாரிசு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மக்களுக்கு சேவை செய்ய தான் இன்னும் 30 - 40 ஆண்டுகள் வாழ விரும்புவதாகக் கூறியுள்ளார்.

திபெத்திய புத்த மதத்தின் தலைமை மதகுருவான தலாய் லாமாவின் 90-வது பிறந்த நாள் நாளை (ஜூலை 6) கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில், தரம்சாலாவிலுள்ள பிரதான தலாய் லாமா கோயில், நீண்ட ஆயுளுக்கான பிரார்த்தனைக் குறித்து பேசிய தலாய் லாமா, கடவுளின் ஆசீர்வாதம் தனக்கு உள்ளது என்பதற்கான தெளிவான அறிகுறிகள் தன்னிடம் தென்படுவதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:

“ பல தீர்க்க தரிசனங்களைப் பார்க்கும்போது, எனக்கு அவலோகிதேஸ்வராவின் ஆசீர்வாதம் இருப்பதாக உணருகின்றேன். என்னால் முடிந்ததை இதுவரை செய்துள்ளேன். நான் மேலும் 30 - 40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன். நாம் நமது நாட்டை இழந்து, இந்தியாவில் நாடுகடத்தப்பட்டு வாழ்வதனாலே என்னால் தரம்சாலாவில் வசிப்பவர்களுக்கு என்னால் நிறைய நன்மைகளைச் செய்ய முடிந்தது” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, தலாய் லாமாவின் மதம் இந்தியாவில் தொடர்வது குறித்து உருவான வதந்திகளுக்கு, நாங்கள் மதங்கள் மற்றும் நம்பிக்கைகள் குறித்து எந்தவொரு கருத்து தெரிவிக்கவோ அல்லது நிலைப்பாடு எடுக்கவோ மாட்டோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The Dalai Lama, the head of Tibetan Buddhism, has said he wants to live another 30-40 years to serve the people, putting an end to rumors about his successor.

இதையும் படிக்க: பாகிஸ்தான் - அஜர்பைஜான் இடையில் ரூ.17,000 கோடி முதலீடு ஒப்பந்தம்!

’ஐ.எஸ்.ஐ.’ தரச் சான்று பெற்ற ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்?

தரம் குறைந்த ஹெல்மெட்களால் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று ‘நுகர்வோர் விவகாரம் மற்றும் இந்திய தர நிர்ணய துறை’ சனிக்கிழமை(ஜூலை 5) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தலைக்கவசம் அணிந்துகொ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஐந்து பேருந்துகள் மோதியதில் 36 அமர்நாத் பக்தர்கள் காயம்

ஜம்மு-காஷ்மீரில் ஐந்து பேருந்துகள் மோதியதில் 36 அமர்நாத் பக்தர்கள் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரின் ராம்பனில் உள்ள சந்தர்கோட் லங்கர் தளத்திற்கு அருகே அமர்நாத் யாத்திரைக்கு சனிக்கிழமை சென்றுகொண்டிருந்த வ... மேலும் பார்க்க

பௌத்த, சீக்கியர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவியுடன் யாத்திரை திட்டம்: யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேசத்தில் பௌத்த, சீக்கிய பக்தர்களுக்கு ஆன்மிக பயணத்தை எளிதாக்கும் வகையில் இரண்டு யாத்திரை உதவித் திட்டங்களைத் தொடங்க அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மறு ஆய்வுக் க... மேலும் பார்க்க

நீரவ் மோடியின் தம்பி நேஹல் மோடியும் மோசடி வழக்கில் கைது!

இந்தியாவில் பொருளாதாரக் குற்றவாளியான நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடியும் வேறொரு மோசடி வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பாக தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோட... மேலும் பார்க்க

யூ டியூப் சானல்களின் வருவாய்க்கு ஆபத்து! ஜூலை 15 முதல் புதிய விதி!

விடியோக்களை பதிவேற்றும் தளமான யூ டியூப், தனது பல்வேறு விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது. இதில், மீண்டும் மீண்டும் பதிவேற்றப்படும் மற்றும் பலரும் ஏற்கனவே போட்ட விடியோக்களை போட்டு வருவாய் ஈட்டுவது இனி இயலா... மேலும் பார்க்க

அணு ஆயுதப் போராக மாறியிருக்கும்! முடிவெடுக்க வெறும் 30 வினாடியே இருந்தது!

இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நடந்தபோது, இந்திய ராணுவம் பிரம்மோஸ் ஏவுகணையைக் கொண்டு தாக்கியபோது, முடிவெடுக்க வெறும் 30 வினாடிகளே இருந்ததாக பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் ராணா சனாவுல்லா பேசியிருக்கிறா... மேலும் பார்க்க