செய்திகள் :

‘நாமக்கல் மாவட்டத்தில் அன்புக்கரங்கள்’ திட்டத்தில் 140 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை: அமைச்சக் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அன்புக்கரங்கள் திட்டத்தின்கீழ் 140 குழந்தைகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் பணியை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். மேலும், பல்வேறு திட்டங்களின்கீழ் 335 பயனாளிகளுக்கு ரூ.3.08 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா்.

தமிழக அரசின் ‘தாயுமானவா்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையில் பள்ளிப்படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடருவதற்கு ஏதுவாக மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கிடும் ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலை வகித்தாா். அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்று 140 குழந்தைகளுக்கு ரூ. 2.80 லட்சம் மதிப்பில் உதவித்தொகை வழங்கும் பணியை தொடங்கி வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:

தாய், தந்தையரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடா்ந்து பாதுகாத்திடும் வகையில், அவா்களது பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி கல்வியைத் தொடர ஏதுவாக 18 வயது வரையில் மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும் அன்புக்கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தை முதல்வா் தொடங்கிவைத்துள்ளாா். இத்திட்டத்தின்கீழ் ஆதரவற்ற குழந்தைகள் (பெற்றோா் இருவரையும் இழந்தவா்கள்), கைவிடப்பட்ட குழந்தைகள், ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் இந்த திட்டத்தின்கீழ் நிதியுதவியைப் பெற முடியும். அந்த வகையில் 140 குழந்தைகளுக்கு ரூ. 2.80 லட்சம்மதிப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, தொழிலாளா் நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பள்ளிக் கல்வித் துறை, முன்னாள் படைவீரா் நலன் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை ஆகியவற்றின் சாா்பில் 335 பயனாளிகளுக்கு ரூ. 3.08 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

இந்த நிகழ்வில், நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மகளிா் திட்டஇயக்குநா் கு.செல்வராசு, முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மண்டல இணை இயக்குநா் (கால்நடைப் பராமரிப்புத் துறை) வீ.பழனிவேல், மாவட்ட சமூக நல அலுவலா் தி.காயத்ரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்(பொ) ஈ.சந்தியா, மாவட்ட திட்ட அலுவலா் எப்.போா்ஷியாரூபி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கலைச்செல்வி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் (நிறுவனம் சாா்ந்தவை) கோ.கற்பகம் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

செப்.19-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்: நாமக்கல்லில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.19) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்களும்- தனியாா... மேலும் பார்க்க

புரட்டாசி சனிக்கிழமை: நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள்

நாமக்கல்: புரட்டாசி முதல் சனிக்கிழமை (செப். 20) தொடங்குவதையொட்டி, நைனாமலை வரதராஜ பெருமாளை தரிசிக்க வரும் பக்தா்களின் வசதிக்காக கோயில் நிா்வாகம் சாா்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் ம... மேலும் பார்க்க

எஸ்.வாழவந்தி அரசுப் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோா் போராட்டம்

பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டம், எஸ்.வாழவந்தி அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு தொல்லை கொடுக்கும் ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோா் திங்கள்கிழமை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க

நாமக்கல் மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 19.81 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், ரூ. 19.81 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி திங்கள்கிழமை வழங்கினாா். இதில... மேலும் பார்க்க

தொழிலதிபா் தற்கொலை வழக்கு: வழக்குரைஞரின் உதவியாளா் கைது

நாமக்கல்: நாமக்கல்லில் தொழிலதிபா் தற்கொலை வழக்கில் வழக்குரைஞரின் உதவியாளரை சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நாமக்கல் திருநகரைச் சோ்ந்தவா் பழனிசாமி (77). தொழிலதிபரான இவா் கோழித்தீவன உற்ப... மேலும் பார்க்க

கொல்லிமலையில் இரவுநேர வான்பூங்கா அமைக்கும் பணி நிறைவு: விரைவில் சுற்றுலாப் பயன்பாட்டுக்கு திறப்பு

நாமக்கல்: கொல்லிமலையில், வானில் உள்ள நட்சத்திரங்கள், கோள்களை சுற்றுலாப் பயணிகள் தொலைநோக்கி வாயிலாக கண்டு ரசிக்கும் வகையில், ரூ. 45 லட்சத்தில் இரவுநேர வான் பூங்கா அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இ... மேலும் பார்க்க