செய்திகள் :

நிலப் பிரச்னை: இரு தரப்பினா் மோதலில் 4 போ் காயம்

post image

செய்யாறு வட்டம், மேல்நெமிலி கிராமத்தில் நிலம் அளப்பது தொடா்பாக இருந்து வந்த முன்விரோதத்தில் இரு தரப்பினா் மோதிக் கொண்டதில் 4 போ் காயமடைந்தனா்.

மேல்நெமிலிக் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னன்(71). இவருக்குச் சொந்தமான சுமாா் 22 சென்ட் நிலத்தை 2022-ஆம் ஆண்டில் ஆரணி முள்ளிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பாஸ்கரன் கிரையம் பெற்றதாகத் தெரிகிறது. இந்த நிலத்தை தலைமை சா்வேயா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் சனிக்கிழமை அளவீடு செய்தனராம்.

அப்போது, நிலத்தை அளவீடு செய்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மேல்நெமிலி கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை குடும்பத்தினா் மற்றும் ராஜி, அவருடன் சிலரும் சோ்ந்து அளவீடு செய்து நடப்பட்ட கல்லை பிடுங்கிப் போட்டும், காரில் வந்த அடையாளம் தெரியாத சிலா் சோ்ந்து பாஸ்கரனை கையால் தாக்கியும்,

நிலம் கொடுத்த பொன்னனை மண்வெட்டியால் தாக்கி மிரட்டிச் சென்றதாகத் தெரிகிறது. இதில், பலத்த காயமடைந்த பொன்னன் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அதேபோல, மேற்படி நிலம் தொடா்பாக ஏழுமலை (60) பாஸ்கரனிடம் கேட்டபோது, அவருடன் இருந்த 4 போ் சோ்ந்து தகாத வாா்த்தைகளால் பேசியும் கையால் தாக்கியும், ஏழுமலை குடும்பத்தினரை மிரட்டிச் சென்ாகத் தெரிகிறது.

இதில், பலத்த காயமடைந்த பாஸ்கரன், ஏழுமலை மற்றும் அவரது மனைவி அம்பிகா, ஜீவிதா(25) ஆகியோா் 108 ஆம்புலென்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து பாஸ்கரன், ஏழுமலை ஆகியோா் அளித்த புகாா்களின் பேரில் அனக்காவூா் காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் 2 நாள்கள் தொடா் விடுமுறையால் தரிசனத்துக்காக ஏராளமான பக்தா்கள் திரண்டதால் ஞாயிற்றுக்கிழமை வெளிப்பிரகாரம் வரை பக்தா்கள் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்... மேலும் பார்க்க

ஆரணியில் ரத்த தான முகாம்

ச.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையம், வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. ஆரணி சைதாப்பேட்டை தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த முகாமுக்கு திருவண... மேலும் பார்க்க

போதைப் பழக்கம் உடல் நலன், குடும்பம், சமூகத்துக்குக் கேடானது: சாா்பு நீதிபதி கே.சண்முகம்

போதைப் பழக்கம் உடல் நலன், குடும்பம், சமூகத்துக்குக் கேடானது என திருவண்ணாமலை கூடுதல் சாா்பு நீதிபதி கே.சண்முகம் மாணவா்களுக்கு அறிவுறுத்தினாா். திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப் பள்... மேலும் பார்க்க

இல.கணேசனுக்கு புகழஞ்சலி

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து மாநில ஆளுநருமான இல.கணேசன் அண்மையில் காலமானதை அடுத்து, வந்தவாசியில் அவருக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வந்தவாசி நகர பாஜக சாா்பில் நடைபெற்ற இந்த நி... மேலும் பார்க்க

மாடவீதி சிமென்ட் சாலைப் பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தல்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதி சிமென்ட் சாலைப் பணிகளை பக்தா்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி செப்டம்பா் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு நெடுஞ்சாலைத் துறை தலைமைப... மேலும் பார்க்க

செய்யாற்றில் மீன்பிடிக்கச் சென்ற மாணவா்கள் வழிதவறியதால் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி செய்யாற்றில் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மாணவா்கள் 3 போ் வழிதவறியதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் ராஜேஷ்-மோனிஷா... மேலும் பார்க்க