செய்திகள் :

சேலம்: பிறந்த பெண் குழந்தையை ரூ.1.20 லட்சத்துக்கு விற்ற தம்பதி; 4 பேர் கைது - விசாரணையில் அதிர்ச்சி

post image

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தைகள் உள்ளது.

இந்த நிலையில், மீண்டும் கர்ப்பம் அடைந்த சிவகாமிக்கு, கடந்த ஒன்பதாம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

ஆனால், சந்தோஷ் அவரது மனைவி சிவகாமி ஆகியோர் கடந்த 14-ஆம் தேதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்துவிட்டதாக மருத்துவ அறிக்கை ஒன்றுடன் ஊருக்கு வந்தனர்.

குழந்தையின் பெற்றோர்

அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் உறவினர்களும் அதை காண்பித்து வந்துள்ளனர். சந்தோஷ், சிவகாமி தம்பதியினர் தங்களுக்கு பிறந்த ஒன்பது நாட்களே ஆன பெண் குழந்தையை ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கு சட்ட விரோதமாக விற்பனை செய்துள்ளதாக சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்யாவிற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் படி மாவட்ட குழந்தைகள் உதவி மைய வழக்கு பணியாளர்கள் மூலமாக மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

அதன் பெயரில் கடந்த 20ஆம் தேதி போலீசார் சந்தோஷின் வீட்டிற்கு நேரில் விசாரணைக்கு சென்றபோது, அவர்களது வீடு பூட்டி இருந்துள்ளது. அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களிடம் விசாரித்த போது பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிவகாமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

அதனை தேவராஜ் என்ற புரோக்கர் மூலமாக ரஞ்சித் என்பவருக்கு ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் பெற்றுக்கொண்டு கடந்த 14ஆம் தேதி விற்பனை செய்தது தெரியவந்தது.

கைது
கைது

இது குறித்து சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து குழந்தையின் தந்தை சந்தோஷ், குழந்தையின் தாய் சிவகாமி, புரோக்கர் தேவராஜ், ரஞ்சித் ஆகிய நான்கு பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்ற குழந்தையை பெற்றோர்களே ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

UP வரதட்சணை கொடுமை: "அம்மா மீது தீ வைத்தனர்" - குழந்தை கண்முன் தாயை எரித்து கொன்ற கணவர் குடும்பம்

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள சிர்ஷா என்ற இடத்தில் வசிப்பவர் விபின். இவரது மனைவி நிக்கி. இவர்களுக்குக் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிக்கியின் மூத்த சகோதரி காஞ்சன் என்பவரையும்... மேலும் பார்க்க

மும்பை: ஒரு வங்கிக்கணக்கு விலை ரூ.7000; ஏழைகளிடம் வங்கிக்கணக்கை வாடகைக்கு வாங்கி மோசடி செய்த கும்பல்

சமீபகாலமாக இணையத்தளக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடன் தருவதாகவோ அல்லது பங்குச்சந்தை முதலீடு, டிஜிட்டல் கைது எனப் பல்வேறு வழிகளில் சைபர் கிரிமினல்கள் பொதுமக்களிடம் பணத்தைப் பறித்து வருகின்றனர். இ... மேலும் பார்க்க

மும்பை: ரயில் குப்பை தொட்டியில் 6 வயது குழந்தையின் பிணம்; விசாரணையில் பகிர் தகவல்; என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசத்திலிருந்து மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் ரயில் நிலையம் வந்த குஷிநகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி. பெட்டியில் கழிவறைக்குள் இருந்த குப்பை தொட்டிகளை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது ஒரு குப்பை த... மேலும் பார்க்க

Cyber Crime: வாட்ஸ்ஆப்பில் வந்த திருமண அழைப்பிதழ்; திறந்து பார்த்ததால் ரூ.2 லட்சத்தை இழந்த நபர்

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் வந்த திருமண அழைப்பிதழைத் திறந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். அங்குள்ள ஹிங்கோலி மாவட்டத்தில் வசிக்கும் அரசு ஊழியர் சுக்ராம் ஷிண்டே என்பவருக்கு அ... மேலும் பார்க்க

SBI வங்கியில் ரூ.2000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு நெருக்கமான இடங்களில் CBI ரெய்டு

தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேசன் மற்றும் ரிலையன்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் திவாலானதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அந்நிறுவனங்கள் இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி க... மேலும் பார்க்க

திருப்பூர்: போன் செயலியில் கிடைத்த நட்பு; ரூ.92,000-ஐ பறிகொடுத்த இளைஞர்; 4 பேர் கைது; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த மாணிக்கபுரம் சாலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கிரைண்டர் என்ற செல்போன் ஆஃப் மூலம் சபரிராஜன் என்பவரிடம் பழகி உள்ளார். இந்நிலையில், அந்த இளைஞரைத் தனிமையில் சந்த... மேலும் பார்க்க