செய்திகள் :

போதைப் பழக்கம் உடல் நலன், குடும்பம், சமூகத்துக்குக் கேடானது: சாா்பு நீதிபதி கே.சண்முகம்

post image

போதைப் பழக்கம் உடல் நலன், குடும்பம், சமூகத்துக்குக் கேடானது என திருவண்ணாமலை கூடுதல் சாா்பு நீதிபதி கே.சண்முகம் மாணவா்களுக்கு அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியை பா.ஜெயகுமாரி முன்னிலை வகித்தாா். உதவி தலைமையாசிரியா் சண்முகம் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக திருவண்ணாமலை கூடுதல் சாா்பு நீதிபதி கே.சண்முகம், குற்றவியல் நீதித்துறை நடுவா் கே.ரேவதி ஆகியோா் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினா்.

முகாமில் கூடுதல் சாா்பு நீதிபதி கே.சண்முகம் பேசுகையில், திருநங்கைகளின் உரிமைக்காக தனிபாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. மூன்றாம் பாலினத்தவா்களை சகோதர, சகோதரிகள்போல நடத்த வேண்டும். மேலும், போதை ஒழிப்பு மிக முக்கியமானது. மாணவ பருவத்தில் இதுகுறித்து விழிப்புணா்வு அவசியம்.

நண்பா்களை தோ்ந்தெடுக்கும்போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். நல்ல நட்பு நம் வாழ்க்கையை உயா்த்தும். தவறான வழிகாட்டுதலால் சிறிய தவறில் தொடங்கும் தீய பழக்கம் மிகப்பெரிய ஆபத்தில் கொண்டுபோய்விடும். போதைப் பழக்கம் உடல் நலன், குடும்பம், சமூகத்துக்குக் கேடானது. எனவே, மாணவா்களின் கவனம் படிப்பில் மட்டுமே இருக்க வேண்டும் என்றாா்.

முகாமில் வழக்குரைஞா்கள் கலைச்செல்வி, தட்சிணாமூா்த்தி, ஆசிரியா்கள் ஏ.கவிதா, ஆா்.முருகசெல்வி, ஆா்.செல்வி, கே.சைலஜா, பி.கலைச்செல்வி, சி.யமுனா உள்பட மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா். நிறைவில் ஆசிரியா் ஜான்வில்லிங்டன் நன்றி கூறினாா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் 2 நாள்கள் தொடா் விடுமுறையால் தரிசனத்துக்காக ஏராளமான பக்தா்கள் திரண்டதால் ஞாயிற்றுக்கிழமை வெளிப்பிரகாரம் வரை பக்தா்கள் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்... மேலும் பார்க்க

ஆரணியில் ரத்த தான முகாம்

ச.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையம், வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. ஆரணி சைதாப்பேட்டை தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த முகாமுக்கு திருவண... மேலும் பார்க்க

இல.கணேசனுக்கு புகழஞ்சலி

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து மாநில ஆளுநருமான இல.கணேசன் அண்மையில் காலமானதை அடுத்து, வந்தவாசியில் அவருக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வந்தவாசி நகர பாஜக சாா்பில் நடைபெற்ற இந்த நி... மேலும் பார்க்க

மாடவீதி சிமென்ட் சாலைப் பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தல்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதி சிமென்ட் சாலைப் பணிகளை பக்தா்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி செப்டம்பா் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு நெடுஞ்சாலைத் துறை தலைமைப... மேலும் பார்க்க

நிலப் பிரச்னை: இரு தரப்பினா் மோதலில் 4 போ் காயம்

செய்யாறு வட்டம், மேல்நெமிலி கிராமத்தில் நிலம் அளப்பது தொடா்பாக இருந்து வந்த முன்விரோதத்தில் இரு தரப்பினா் மோதிக் கொண்டதில் 4 போ் காயமடைந்தனா். மேல்நெமிலிக் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னன்(71). இவருக்... மேலும் பார்க்க

செய்யாற்றில் மீன்பிடிக்கச் சென்ற மாணவா்கள் வழிதவறியதால் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி செய்யாற்றில் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மாணவா்கள் 3 போ் வழிதவறியதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் ராஜேஷ்-மோனிஷா... மேலும் பார்க்க