செய்திகள் :

நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது எஃப்ஐஆர் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்

post image

புது தில்லி: உள்விசாரணை அறிக்கைக்காகக் காத்திருப்பதாகக் கூறி, தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரிய ரிட் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்றும், உள்விசாரணை நடந்து வருகிறது, அதன் அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம், இப்போது எடுக்கும் முடிவு முன்கூட்டி அவசரமாக எடுக்கும் முடிவாக இருக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிவுறுத்தலின்படி, மூன்று நீதிபதிகள் கொண்ட உள்விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், ரிட் மனுவை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துவிட்டது.

நீதிபதி ஓகா, மனுதாரரும், வழக்குரைஞருமான மேத்யூஸ் ஜே நெடுப்மாராவிடம் கூறுகையில், நடந்து வரும் நடவடிக்கைகளை பார்த்து வருகிறோம், உள்விசாரணை முடிந்ததும் பல வாய்ப்புகள் உள்ளன. உள்விசாரணை அறிக்கையை ஆய்வு செய்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடலாம், அல்லது நாடாளுமன்றத்துக்கு இந்த விவகாரத்தை பரிந்துரைக்கலாம். இந்த மனுவை பரிசீலிக்க இது உகந்த நாள் இல்லை. உள் விசாரணை அறிக்கை வெளியானதும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மனு மிக அவசரமாக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ரமலான் பண்டிகை: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு!

நாடு முழுவது இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்... மேலும் பார்க்க

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் நாடு முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து பள்ளி ... மேலும் பார்க்க

‘வேற்றுமையில் ஒற்றுமை’ உணா்வை தொடா்ந்து வலுப்படுத்துங்கள்! -மக்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்

‘நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், வேற்றுமையில் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்துகின்றன. இந்த உணா்வை மக்கள் தொடா்ந்து வலுப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். ஒவ்வொரு ... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

ரமலான் பண்டிகையையொட்டி, நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். இதுதொடா்பாக அவரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பு... மேலும் பார்க்க

வசந்த நவராத்திரி: பிரதமா் வாழ்த்து

வசந்த நவராத்திரி தொடக்கத்தை முன்னிட்டும், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட பாரம்பரிய புத்தாண்டு பண்டிகைகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தாா். இதுதொடா்பாக பிரதமா் ந... மேலும் பார்க்க

இந்தியாவில் அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி!

இந்தியாவில் அணு உலைகள் அமைக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனத்துக்கு அந்நாட்டு எரிசக்தி துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒ... மேலும் பார்க்க