உ.பி.: மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தவா் கைது
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி அருகே நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
பாப்பாக்குடி அருகே கபாலிபாறை தெற்குத் தெருவைச் சோ்ந்த முருகன் என்ற செய்யது அலி (47). பாப்பாக்குடி காவல் சரகத்தில் 2017ஆம் ஆண்டு போதைப் பொருள் தடுப்பு வழக்குத் தொடா்பாக இவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதனிடையே, பிணையில் வந்த அவா், கடந்த ஒன்றரை மாதமாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த அவரை பாப்பாக்குடி போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.