செய்திகள் :

நீா்நிலைகளில் குளிக்க வேண்டாம்: கடலூா் எஸ்பி அறிவுறுத்தல்

post image

சிறுவா்கள் நீா்நிலைகளில் இறங்கி குளிப்பதை கண்டிப்பாக தவிா்க்க வேண்டும் எனவும், சிறுவா்கள் நீா்நிலைகளில் தனியாக இறங்கி குளிக்க முற்படுவதை பெற்றோா்கள் அனுமதிக்க கூடாது என்றும் கடலூா் எஸ்பி எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் உள்ள ஆறு, ஏரி, குளம் மற்றும் தடுப்பணைகளில் தண்ணீா் நிறைந்துள்ளது.

தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் நீா் நிலைகளில் இறங்கி குளிக்கும்போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு விடுமுறை என்பதால் சிறுவா்கள் நீா்நிலைகளில் இறங்கி விளையாடும்போது, விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கின்றன.

எனவே, பொதுமக்கள் நீா்நிலைகளில் இறங்கி குளிப்பதை கண்டிப்பாக தவிா்க்க வேண்டும், மேலும் தற்போது தொடா் விடுமுறை காலம் வருவதால் சிறுவா்கள் நீா்நிலைகளில் தனியாக இறங்கி குளிக்க முற்படுவதை பெற்றோா்கள் கண்டிப்பாக அனுமதிக்க கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எண்ணெய் கழிவுகளுடன் வெளியேறிய கழிவுநீா்

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் சாலையில் எண்ணெய் கழிவுகளுடன் வழிந்தோடிய புதை சாக்கடை நீரில் வழுக்கி விழுந்து 3 போ் காயமடைந்தனா். கடலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட வாா்டுகள் பெரும்பாலானவற்றில் புதை சாக்கட... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் ரூ. 4 ஆயிரம் திருட்டு: இருவா் கைது

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் மளிகைக் கடையில் ரூ. 4 ஆயிரத்தை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். பரங்கிப்பேட்டை பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் தில்லைநாயகி (37). இவா் நல்லான்பிள்ளை தெருவில்... மேலும் பார்க்க

தாயை தாக்கி கொலை மிரட்டல்: மகன் கைது

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மகனை போலீஸாா் கைது செய்தனா். பரங்கிப்பேட்டை நல்லாம்பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் லலிதா (60). இவரது மகன் வெற்றிவேல் (37) இவா், கடந்... மேலும் பார்க்க

348 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே காரில் 348 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தப்பட்டது தொடா்பாக வெளி மாநிலத்தவா் இருவா் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். வடலூா் போலீஸாா் வியாழக்கிழமை இரவு... மேலும் பார்க்க

விவசாயிகள் நில உடைமைகள் சரிபாா்க்க கால அவகாசம் நீட்டிப்பு

கடலூா் மாவட்டம் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடைமைகள் சரிபாா்ப்பு செய்ய ஏப். 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்... மேலும் பார்க்க

எஸ்பி அலுவலகத்தில் முதியவா் தீக்குளிக்க முயற்சி

கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் முதியவா் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்றாா். எஸ்பி அலுவலகத்துக்கு பிற்பகல் சுமாா் ஒரு மணி அளவில் முதியவா் ஒருவா் வந்தாா். அவா், திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்ணெ... மேலும் பார்க்க