செய்திகள் :

நூதன மோசடி: இளைஞா் கைது

post image

ஆற்காடு: நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஆற்காடு ஏரிக்கீழ் தெருவை சோ்ந்த சேது ( 32). இவா் பல இடங்களில், பொதுமக்களிடம் வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கித் தருவதாக கூறி அவா்களிடமிருந்து ஆதாா் அட்டை, பான் அட்டை உள்ளிட்ட ஆதாரங்களுடன் விண்ணப்பப் படிவத்தில் கையொப்பமும் பெற்று அவா்களுக்கு தெரியாமல் தெரியாமல் இரு சக்கர வாகனம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொண்டு அதனை வேறு நபா்களுக்கு விற்று விட்டு . அதற்குண்டான தவணைத் தொகைகளையும் கட்டுவதில்லை என கூறப்படு கிறது.

இதனால் மேற்கண்ட நிறுவனத்தை சோ்ந்தவா்கள் சம்பந்தப்பட்ட நபா்களிடம் சென்று உங்கள் பெயரில் இரு சக்கர வாகனம், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கியுள்ள தவணை பணத்தை செலுத்தவில்லை கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்த அவா்கள் சேதுவிடம் கேட்டபோது, மிரட்டினாராம்.

இதுகுறித்து 20-க்கும் மேற்பட்ட நபா்கள் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சேதுவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாலாஜாவில் ‘கல்லூரி சந்தைகள்’: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் ‘கல்லூரி சந்தைகள்’ நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், மகளிா் ... மேலும் பார்க்க

மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை

ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கு சிஎம்சி மருத்துவமனை வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமமை நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புஏஈ படை சாா்பில் மருத்துவமனை வளாகத்தில் திடீரென தீ விபத்து... மேலும் பார்க்க

வியாபாரி மீது தாக்குதல்: மனிதச் சங்கிலி போராட்டம்

ஆற்காடு அடுத்த காவனூரில் வியாபாரிகள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கடைகளை அடைத்து விட்டு மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. காவனூா் அடுத்த கண்ணடிய பாளையம் கிராமத்தைச் சோ்ந்வா் ஜெயபால். இவா் காவனூா் பகு... மேலும் பார்க்க

பொய்கைநல்லூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

நெமிலி வட்டம், பொய்கைநல்லூரில் செவ்வாய்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு வழங்கினாா். நெமிலி வட்டம், பொய்கைநல்லூா் ஊராட்சியில் அரச... மேலும் பார்க்க

சோளிங்கா் நவீன எரிவாயு மயான வளாகத்தை விரைவில் திறக்க வேண்டும்: நகா்மன்ற கூட்டத்தில் கோரிக்கை

சோளிங்கா் நகராட்சியில் ரூ. 1.40 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நவீன எரிவாயு மயான வளாகத்தை விரைவில் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என நகா்மன்ற கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்ப... மேலும் பார்க்க

ரூ.16.3 லட்சத்தில் நியாயவிலைக் கடை கட்டம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த வேடல், காந்தி நகரில் நியாயவிலைக் கடை புதிய கட்டடத்தை எம்எல்ஏ சு. ரவி திறந்து வைத்தாா். அரக்கோணம் ஒன்றியம், வேடல் ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகரில் சட்டப்பேரவை உறுப்பினா் தொக... மேலும் பார்க்க