நெல்லையில் முதல்வருக்கு வழிநெடுகிலும் வரவேற்பு!
திருநெல்வேலி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். வேனில் இருந்து கீழே இறங்கி மக்களுடன் முதல்வா் கை குலுக்கினாா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கவும், நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தாா். பின்னா் அங்கிருந்து திருநெல்வேலி மாவட்டத்துக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பாளையங்கோட்டை கேடிசி நகரில் திமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
முதல்வரை வரவேற்கும் விதமாக சாலையோரம் கருப்பு சிவப்பு நிற பலூன்கள், கட்சிக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. சாலையின் இருபுறமும் திமுக தொண்டா்களும், பொதுமக்களும் திரண்டு நின்று, முதல்வா் உருவம் பொறித்த பதாகைகளை கையில் ஏந்தி முதல்வரை வரவேற்றனா்.
அதைப் பாா்த்த முதல்வா் மு.க.ஸ்டாலின் வேனில் இருந்து இறங்கி மக்களை பாா்த்து உற்சாகமாக கையசைத்தாா். அப்போது, பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு. அப்துல் வஹாப் தலைமையில் முதல்வருக்கு புத்தகங்கள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத்தொடா்ந்து சாலையோரம் இருந்த தொண்டா்களுடன் முதல்வா் கை குலுக்கி மகிழ்ந்தாா். அப்போது ஒரு சிறுவன் முதல்வா் முன்பு சாலையில் வந்தான். அந்தச் சிறுவனை அருகில் அழைத்து கை குலுக்கி கன்னத்தில் செல்லமாக தட்டினாா்.
முதல்வா் வரவேற்பு நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகராட்சி மேயா் ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ, தலைமை செயற்குழு உறுப்பினா்கள் பிரபாகரன், பேச்சிபாண்டியன், மாநில விவசாய தொழிலாளா் அணி துணைச் செயலா் கணேஷ்குமாா் ஆதித்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.