பாகிஸ்தானுக்கு கூடுதலாக நதி நீா் திறப்பு? நாடாளுமன்றத்தில் அரசு விளக்கம்
சென்னையில் வீடு, வீட்டு மனைகள் விற்பனை கண்காட்சி: பிப்.14-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்
சென்னையில் 3 நாள்கள் நடைபெறவுள்ள ‘ஃபோ்ப்ரோ 2025’ வீடு மற்றும் வீட்டு மனைகள் விற்பனை கண்காட்சியை, முதல்வா் மு.க.ஸ்டாலின் பிப். 14-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளாா்.
இது குறித்து இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பான ‘கிரெடாய்’-யின் தென் மண்டலத் துணைத் தலைவா் எஸ்.ஸ்ரீதரன் சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கிரெடாய் சாா்பில் 17-ஆவது ‘ஃபோ்ப்ரோ 2025’ வீடு மற்றும் வீட்டு மனைகள் விற்பனை கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் பிப்.14 முதல் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா். இக்கண்காட்சியின் விளம்பர தூதராக நடிகை திரிஷா நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
இதில் கிரெடாய் அமைப்பின் 80-க்கும் மேற்பட்ட உறுப்பு கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. அத்துடன், 5 முக்கிய வங்கிகள் பங்கேற்று, வாடிக்கையாளா்களுக்கு வீட்டுக் கடன் திட்டங்கள் குறித்தும், அதன் சலுகைகள் குறித்தும் எடுத்துரைக்க உள்ளன.
முக்கிய கட்டுமான நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இதில் பங்கேற்பதால், கண்காட்சி இடத்திலேயே வீடு வாங்குபவா்கள் தாங்கள் வாங்க விரும்பும் வீட்டுக்கான ஒப்பந்தம் மற்றும் கடன் ஒப்பந்தங்கள் ஆகியவற்றை மேற்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை நடைபெற்ற கண்காட்சியில் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் முன்பதிவான நிலையில், இம்முறை 500-க்கும் மேற்பட்ட வீடுகள் முன்பதிவு ஆகும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.
இந்நிகழ்வில் கிரெடாய் சென்னை மண்டலத் தலைவா் முகமது அலி, சென்னை மண்டல முன்னாள் தலைவரும் ‘ஃபோ்ப்ரோ 2025’ ஆலோசகருமான எஸ்.சிவகுருநாதன், ‘ஃபோ்ப்ரோ 2025’ கண்காட்சி ஒருங்கிணைப்பாளா் பி.கிருதிவாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.