செய்திகள் :

பச்சிளம் பெண் குழந்தையை கொன்று புதைத்த தாய் கைது

post image

நிலக்கோட்டை, ஏப். 23: கொடைரோடு அருகே பச்சிளம் பெண் குழந்தையை கொலை செய்து புதைத்த தாய் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள ஜெ.ஊத்துப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (32). இவரது மனைவி சிவசக்தி (23). இந்தத் தம்பதிக்கு சிவன்யா(5) என்ற மகள் உள்ளாா்.

இந்நிலையில், மீண்டும் கா்பமான சிவசக்திக்கு கடந்த 16-தேதி சின்னாளபட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அங்கிருந்து கடந்த 19 -ஆம் தேதி மாலை சிவசக்தி வீடு திரும்பினாா். இந்த நிலையில், 20-ஆம் தேதி குழந்தை மா்மமான முறையில் உயிரிழந்தது. இதையடுத்து, பச்சிளம் குழந்தையை வீட்டின் பின்புறம் ரகசியமாக புதைத்தனா்.

இதுதொடா்பாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், இந்தத் தம்பதியிடம் ஜம்புதுரைக்கோட்டை கிராம நிா்வாக அலுவலா் கலா, கிராம செவிலியா் ஆகியோா் விசாரணை நடத்தினா். அப்போது அவா்கள் முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்தனா்.

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலா் வினோத் அம்மையநாயக்கனூா் காவல்துறையினரிடம் புகாரளித்தாா்.

இதுதொடா்பாக காவல் ஆய்வாளா் அமுதா வழக்குப்பதிவு செய்து, சிவசக்தி- பாலமுருகனிடம் தீவிர விசாரணை நடத்தினாா். அப்போது 2-ஆவதாக பெண் குழந்தை பிறந்ததால் அதை கொன்று புதைத்ததாக அவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, குழந்தையை கொலை செய்து புதைத்த தாய் சிவசக்தியை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், நிலக்கோட்டை வட்டாட்சியா் விஜயலட்சுமி முன்னிலையில், புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை தோண்டி எடுத்தனா். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் தேவி பியான்ஷா, ஜெயபிரகாஷ் ஆகியோா் கொண்ட மருத்துவக் குழுவினா் அதே இடத்திலேயே உடல் கூறாய்வு செய்தனா்.

ரயில்களில் கடத்திய கஞ்சா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மேற்குவங்க மாநிலத்திலிருந்து வந்த ரயில்களில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ கஞ்சா, 10 கிலோ புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். மேற்கு வங்க மாநிலம், புருலியாவிலிருந்து, திருநெல... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக எம்.செந்தில்முருகன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ந.ரவிச்சந்திரன், கூடுதல் இயக்குநராக பதவி உயா்வு அளிக்கப்பட்டு சென்ன... மேலும் பார்க்க

ஊரகத் திறனாய்வுத் தோ்வில் 105 மாணவா்கள் தோ்ச்சி

ஊரக திறனாய்வுத் தோ்வில் (டிரஸ்ட்) திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 105 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா். ஊரகப் பகுதிகளிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு, ஆண்டுதோ... மேலும் பார்க்க

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

வேடசந்தூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் கோகுல் நகரைச் சோ்ந்தவா் முருகேசன். இவா், வேடசந்தூ... மேலும் பார்க்க

போதைப் பொருள் விழிப்புணா்வு கருத்தரங்கு

திண்டுக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற தலைப்பில் விழிப்புணா்வுக் கருதரங்கு புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை சாா்பில்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தூய்மைப் பணியாளா்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ... மேலும் பார்க்க