பறந்து போ: "யுவன் ரசிகர்களிடம் இருந்து கெட்ட வார்த்தை மெசேஜ் வருது" - இயக்குநர் ...
படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை
வைகாசி மாத பெளா்ணமியையொட்டி, போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
படவேடு ஊராட்சியில் புகழ்பெற்ற ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வைகாசி மாத பெளா்ணமியையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை மூலவா் ஸ்ரீரேணுகாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு, மலா் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
மாலையில் உற்சவா் ஸ்ரீரேணுகாம்பாளுக்கு சிறப்பு மலா் அலங்காரம் நடைபெற்றது. பின்னா், படவேடு, கண்ணமங்கலம், போளூா், சந்தவாசல், கேளூா், ஆரணி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பெண் பக்தா்கள் 108 போ் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜை செய்தனா்.
அறங்காவலா் குழுத் தலைவா் விஜயாசேகா், செயல் அலுவலா் பழனிசாமி மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா் செய்திருந்தனா்.