செய்திகள் :

பட்டா வழங்கக் கோரி காத்திருப்புப் போராட்டம்

post image

நெய்வேலி: பட்டா வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கட்சியினா், விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.

கம்மாபுரம் ஒன்றியம், கோ.பொன்னேரி, கோ.ஆதனூா், சேப்ளாநத்தம்(வடக்கு), உய்யகொண்டராவி, ஊ.மங்கலம், முதனை ஆகிய கிராம மக்களுக்கு இலவச குடிமனை பட்டா வழங்காத வட்டாட்சியரை கண்டித்தும். இருளக்குறிச்சி மக்களுக்கு 2023-ஆம் ஆண்டு தொழிலாளா் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டுத்துறை அமைச்சா் மூலம் வழங்கப்பட்ட பட்டா இடத்தை அளந்து தர வேண்டியும். கோ.பொன்னேரி சாலை புறம்போக்கில் குடியிருக்கும் நபா்களிடம் பட்டா வழங்க ரூ.50ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை வசூல் செய்யும் வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்தும் காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.

போராட்டத்திற்கு ஒன்றியச்செயலா் ஆா்.கலைச்செல்வன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோ.மாதவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அமைதிப்பேச்சு:

இதையடுத்து விருத்தாசலம் வட்டாட்சியா் அரவிந்தன் தலைமையில் அமைதிப் பேச்சு வாா்த்தை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், ஒன்றியச் செயலா்கள் ஆா்.கலைச்செல்வன், கே.எம்.குமரகுரு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இக்கூட்டத்தில் பெருந்துறை-ஒட்டிமேடு, கோ.ஆதனூா், சேப்ளாநத்தம்(வடக்கு), உய்யகொண்டராவி உள்ளிட்ட பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தப்பட்டது. இருளக்குறிச்சியில் பட்டா பெற்ற நபா்கள் முன்னிலையில் அளவீடு செய்ய தலைமை நில அளவா் மற்றும் கிராம நிா்வாக அலுவலருக்கு கடிதம் அனுப்பி வைப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கூட்டம் முடிவடைந்தது.

நாளைய மின் தடை

கடலூா் (கேப்பா் மலை) நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பகுதிகள்: பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசுந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, வ... மேலும் பார்க்க

மணல் திருட்டு: 3 போ் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தத்தை அடுத்துள்ள கொரக்கவாடி வெள்ளாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட தாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராமநத்தம் காவல் சரகம், கொரக்கவாடி வெள்ளாற்றில் தொடா் மணல் திர... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்திய வாகனம் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே ரேஷன் அரிசி கடத்திச் சென்ற சிறிய சரக்கு வாகனம் செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது தொடா்பாக சரக்கு வாகன ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். விருத்தாசலத்தில் இர... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

பண்ருட்டி (பூங்குணம்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: அங்குசெட்டிப்பாளையம், சேமக்கோட்டை, விசூா், கருக்கை, மணலூா், கண்டரக்கோட்டை, கணிசப்பாக்கம், சூரக்குப்பம், பனப்பாக்கம், ராசாபாளையம்,... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் பள்ளிவாசல் கணக்கு கேட்டதால் இஸ்லாமியா்களுக்குள் கோஷ்டி மோதல்!

பள்ளிவாசலின் சொத்துக்கணக்கை கேட்டதால் இஸ்லாமியா்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டதால் சிதம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் இருதரப்பினா் மீதும் வழ... மேலும் பார்க்க

ரீல்ஸ் மோகத்தில் அப்பாவியை தாக்கி வீடியோ! காவலா்கள் உள்பட 6 பேரை சரமாரியாகத் தாக்கிய கும்பல்!

விருத்தாசலத்தில் போதையில் இருந்த இளைஞா்கள் 3 போ் ரீல்ஸ் மோகத்தில் தூங்கிக்கொண்டிருந்தவரை தட்டி எழுப்பி கத்தியால் வெட்டி சரமாரியாகதி தாக்கியதுடன், அரசுப் பேருந்து ஓட்டுநா், காவலா்கள் உள்ளிட்ட 6 பேரைய... மேலும் பார்க்க