செய்திகள் :

பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த நபர் சுட்டுப்பிடிப்பு!

post image

பஞ்சாப் மாநிலத்தில் மக்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவரை காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்துள்ளனர்.

பஞ்சாபின் மொஹாலி மாவட்டத்திலுள்ள காகார் பாலத்தின் அருகில் கோல்டி பிரார் எனும் நிழல் உலக தாதாவின் பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்பட்ட நபரை காவல் துறையினர் சுற்றி வளைத்துள்ளனர்.

அப்போது, அவர் போலீஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச்செல்ல முயன்றுள்ளார். அதற்கு காவல் துறையினர் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் அவரது இடது காலில் குண்டு பாய்ந்து அவர் கீழே விழுந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும், அவரிடமிருந்து ஒரு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஹிமாசல்: தீ விபத்தில் சுற்றுலாப் பயணி பலி! 2 பேர் படுகாயம்!

இந்நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் அம்ரித்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்த மலிகாட் (எ) மேக்ஸி என்பதும் அவர் நிழல் உலக தாதாவான கோல்டி பிராரின் கும்பலைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், மக்களை மிரட்டி பணப் பறிப்பில் ஈடுபட்டதற்காக அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையிலுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, கோல்டி பிரார் மற்றும் கோல்டி தில்லோன் ஆகியோரின் பணம் பறிக்கும் கும்பலானது மொஹாலியைச் சேர்ந்த தொழிலதிபரைக் குறிவைத்து அவரிடம் கடந்த ஜனவரி மாதம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

மேலும், கனடா நாட்டைச் சேர்ந்த நிழல் உலக தாதாவான சதிந்தர்ஜித் சிங் (எ) கோல்டி பிரார் என்பவரை இந்திய அரசு தீவிரவாதி என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மசூதியில் குண்டு வெடிப்பு: தலைமை இமாமை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்திலுள்ள மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. கைபர் பக்துன்குவாவின் மொந்ஷேரா மாவட்டத்திலுள்... மேலும் பார்க்க

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு!

ஹரியாணா மாநிலம் அம்பலா மாவட்டத்திலுள்ள நீதிமன்றத்தின் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அம்பலா மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (மார்ச்.1) வழக்கு விசாரணைக்காக ஒரு நபர் ஆஜராகியுள்ளார். அப்போது... மேலும் பார்க்க

அசாம்: ரூ.2.2 கோடி போதைப் பொருள் பறிமுதல்! 2 பேர் கைது!

வடகிழக்கு மாநிலமான அசாமில் ரூ.2.2 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 2 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.சாச்சார் மாவட்டத்தில... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகைக்கு ஆடுகள் பலியிடுவதைத் தவிர்க்க வேண்டும்! மக்களுக்கு அரசர் வலியுறுத்தல்!

மொராக்கோவில் பக்ரீத் பண்டிகையின்போது ஆடுகள் பலியிடப்படுவதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசர் வலியுறுத்தியுள்ளார். வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கடந்த 7 ஆண்டுகளாக வறட்சியான சூழ... மேலும் பார்க்க

ஹிமாசல்: தீ விபத்தில் சுற்றுலாப் பயணி பலி! 2 பேர் படுகாயம்!

ஹிமாசல பிரதேசத்தின் தனியார் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் பலியாகியுள்ளார். மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளான ரித்தேஷ், அஷிஷ் மற்றும் அவ்தூத... மேலும் பார்க்க

ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

ஏற்காட்டில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஏற்காடும் ஒன்று. இங்கு வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாள்களில் சுற... மேலும் பார்க்க