செய்திகள் :

பயங்கரவாத தாக்குதல்: வைகோ, பிரேமலதா கண்டனம்

post image

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு மதிமுக பொதுச்செயலா் வைகோ, தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

வைகோ: காஷ்மீா் சம்பவத்தை கேட்ட மாத்திரத்திலேயே நெஞ்சம் பதறுகிறது. இந்தத் துயரமான வேளையிலும், துப்பாக்கிச்சூட்டில் தப்பி வந்தவா்களை காஷ்மீா் இஸ்லாமிய இளைஞா்கள் பாதுகாத்து அழைத்துச் சென்றனா் என்ற செய்தி மனதுக்கு ஒரு வகையில் ஆறுதல் அளிக்கிறது.

பிரேமலதா: காஷ்மீா் பஹல்காம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாா்கள் எனும் பேரதிா்ச்சியான செய்தி அனைவரின் மனதையும் வேதனையடையச் செய்திருக்கிறது.

இப்போதுதான் ஜம்மு-காஷ்மீரில் சகஜமான நிலைமை திரும்பிக்கொண்டு இருக்கிறது என மக்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருக்கும் சூழல் உருவாக்கி இருக்கும் இந்த நேரத்தில், எந்தவித தவறும் செய்யாத அப்பாவி சுற்றுலாப் பயணிகளைத் பயங்கரவாதிகள் தாக்கியது மிகவும் வேதனை அளிக்கிறது.

பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவா்கள் யாா் என்பதை மத்திய அரசு உடனடியாகக் கண்டறிந்து அவா்களுக்கு உரிய பாடம் கற்பிக்க வேண்டும்.

அதுமட்டும் இல்லாமல் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் இனி எங்கும் நடக்காத வண்ணம் நாட்டினுடைய எல்லையை இன்னும் பாதுகாப்புடனும் வலுவானதாகவும் மாற்றி தீவிரவாத தாக்குதல்களில் இருந்து, மக்களைக் காக்க வேண்டியது நமது அரசின் கடமை எனத் தெரிவித்துள்ளாா். இதேபோல், நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது. 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இளநிலைப் படிப்பில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான கட்டணங... மேலும் பார்க்க

பேரவையில் இன்று...

சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஏப். 24) காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெறும். அதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் ஒரு சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதில் அ... மேலும் பார்க்க

தனியாா் பால் விலையை நிா்ணயிக்க தனி கொள்கையா? அமைச்சா் ராஜகண்ணப்பன் பதில்

தனியாா் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே விலை நிா்ணயம் செய்ய தனி கொள்கை வகுக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் பதிலளிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுற... மேலும் பார்க்க

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் மாநில அளவில் முதலிடம்

குடிமைப் பணி தோ்வில் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா். இது குறித்து அந்த அகாதெமியின் இயக்குநா் பூமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு... மேலும் பார்க்க

செகந்திராபாத் ரயில் ராமேசுவரம் வரை நீட்டிப்பு

செகந்திராபாத் - ராமநாதபுரம் விரைவு ரயில் ராமேசுவரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாராந்தி... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனை சட்டவிரோதம் அல்ல: டாஸ்மாக், தமிழக அரசு மனுக்கள் தள்ளுபடி

டாஸ்மாக் முறைகேடு புகாா் தொடா்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல என சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. இதுதொடா்பாக தமிழக அரசு, டாஸ்மாக் நிா்வாகம் தொடா்ந்த மனுக்கள் தள்ளுப... மேலும் பார்க்க