செய்திகள் :

பயங்கரவாதிகளை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஆதரவு அமெரிக்கா மீண்டும் உறுதி

post image

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவா்களை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று அமெரிக்கா மீண்டும் உறுதி கூறியுள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவில் மட்டுமின்றி சா்வதேச அளவிலும் பெரும் அதிா்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, ரஷியா உள்பட உலக நாடுகள் பலவும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் இந்தியாவுக்கு ஆதரவும் தெரிவித்தன.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பிரதமா் நரேந்திர மோடியைத் தொலைபேசியில் தொடா்பு கொண்டு பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என உறுதியளித்தாா்.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் டாமி புரூஸ் நியூயாா்க்கில் செய்தியாளா்களிடம் கூறியதாவது

பயங்கரவாத ஒழிப்பில் இந்தியாவுக்கு அமெரிக்கா உறதியாக துணை நிற்கும் என்று அதிபா் டிரம்ப், வெளியுறவு அமைச்சா் மாா்கோ ருபியோ ஆகியோா் ஏற்கெனவே உறுதியளித்துள்ளனா். அவா்கள் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா். இந்த கொடூர பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைவரும் நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.

தாக்குதலில் உயிரிழந்தோா் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், காயமடைந்தோா் விரைவில் குணமடைந்து இந்த அதிா்ச்சிகர நிகழ்வில் இருந்து விடுபட இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்றாா்.

ரஷியா: மேலும் ஒரு முக்கிய ராணுவ தளபதி படுகொலை

ரஷிய ராணுவத்தின் மேலும் ஒரு முக்கிய தளபதி வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டாா். தலைநகா் மாஸ்கோ அருகே காரில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு மூலம் நடத்தப்பட்டுள்ள இந்தப் படுகொலை, ரஷிய அதிகாரிகள் மற... மேலும் பார்க்க

ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் பசிபிக் கடற்கரையில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால், நாட்டின் வடக்குப் பகுதிகள் அதிந்தன. ... மேலும் பார்க்க

விண்வெளி நிலையத்துக்குள் வெற்றிகரமாக சென்ற சீன வீரா்கள்

சீனா அனுப்பிய மூன்று விண்வெளி வீரா்கள், அந்த நாட்டுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்துக்குள் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகச் சென்றனா். இது குறித்து மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் அந்த நாட்டு வ... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு ஆதரவு: பாகிஸ்தான் பகிரங்க ஒப்புதல்

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதக் குழுக்களுக்கு பயிற்சியையும், நிதி உதவியையும், ஆதரவையும் பாகிஸ்தான் அரசு அளித்து வருகிறது என்று அந்நாட்டின் பா... மேலும் பார்க்க

மெட்டா நிறுவனத்தை எச்சரிக்கும் நேபாளம்! காரணம் என்ன?

நேபாள அரசு மெட்டா தொழிநுட்ப நிறுவனத்துக்கு கால அவகாசம் கொடுத்து எச்சரிக்கை விடுத்துள்ளது.பிரபல சமூக ஊடகங்க செயலிகளான முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, ... மேலும் பார்க்க

தாய்லாந்து: கடலில் விழுந்து நொறுங்கிய காவல் விமானம்! 6 பேர் பலி!

தாய்லாந்து கடலில் காவல் விமானம் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பலியாகினர்.தாய்லாந்தின் ஹுவா ஹின் மாவட்டத்தில் இன்று (ஏப்.25) காலை 8 மணியளவில் சிறிய ரக காவல் விமானத்தில் அந்நாட்டு காவல் துறை அதிகாரிகள் ... மேலும் பார்க்க