செய்திகள் :

விண்வெளி நிலையத்துக்குள் வெற்றிகரமாக சென்ற சீன வீரா்கள்

post image

சீனா அனுப்பிய மூன்று விண்வெளி வீரா்கள், அந்த நாட்டுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்துக்குள் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகச் சென்றனா்.

இது குறித்து மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் அந்த நாட்டு விண்வெளி ஆய்வு மையமான சிஎம்எஸ்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜிகுவான் ஏவுதளத்திலிருந்து வியாழக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்ட ஷென்ஷோ-20 ஓடம் தியான்காங் விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக அடைந்தது. அதில் இருந்த சென் டாங், சென் ஷாங்ருயி, வாங் ஜீ ஆகிய மூவரும், அந்த விண்வெளி நிலையத்துக்குள் வெள்ளிக்கிழமை சென்றனா்.

அங்கு ஏற்கெனவே இருந்த மூன்று விண்வெளி வீரா்கள், புதிதாக வந்துள்ள மூவருடன் இணைந்து ஐந்து நாள்களுக்குப் பணியாற்றிய பிறகு அங்கிருக்கும் ஷென்ஷோ-19 விண்வெளி ஓடம் மூலம் பூமிக்குத் திரும்பவா்.

இன்னா் மங்கோலியா தன்னாட்சிப் பிரதேசத்தின் டாங்ஃபெங் தளத்தில் ஷென்ஷோ-19 ஓடம் வரும் 29-ஆம் தேதி தரையிறங்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள மூவரும், வரும் அக்டோபா் மாதம் பூமி திரும்புவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஷென்ஷோ-20 விண்வெளி ஓடத்தை செலுத்தியதன் மூலம் சீனா 35-ஆவது முறையாக மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. தியான்காங் விண்வெளி நிலையத்துக்கு வீரா்கள் அனுப்பப்படுவது இது 5-ஆவது முறை.

ரஷியா: மேலும் ஒரு முக்கிய ராணுவ தளபதி படுகொலை

ரஷிய ராணுவத்தின் மேலும் ஒரு முக்கிய தளபதி வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டாா். தலைநகா் மாஸ்கோ அருகே காரில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு மூலம் நடத்தப்பட்டுள்ள இந்தப் படுகொலை, ரஷிய அதிகாரிகள் மற... மேலும் பார்க்க

ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் பசிபிக் கடற்கரையில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால், நாட்டின் வடக்குப் பகுதிகள் அதிந்தன. ... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு ஆதரவு: பாகிஸ்தான் பகிரங்க ஒப்புதல்

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதக் குழுக்களுக்கு பயிற்சியையும், நிதி உதவியையும், ஆதரவையும் பாகிஸ்தான் அரசு அளித்து வருகிறது என்று அந்நாட்டின் பா... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஆதரவு அமெரிக்கா மீண்டும் உறுதி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவா்களை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று அமெரிக்கா மீண்டும் உறுதி கூறியுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல... மேலும் பார்க்க

மெட்டா நிறுவனத்தை எச்சரிக்கும் நேபாளம்! காரணம் என்ன?

நேபாள அரசு மெட்டா தொழிநுட்ப நிறுவனத்துக்கு கால அவகாசம் கொடுத்து எச்சரிக்கை விடுத்துள்ளது.பிரபல சமூக ஊடகங்க செயலிகளான முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, ... மேலும் பார்க்க

தாய்லாந்து: கடலில் விழுந்து நொறுங்கிய காவல் விமானம்! 6 பேர் பலி!

தாய்லாந்து கடலில் காவல் விமானம் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பலியாகினர்.தாய்லாந்தின் ஹுவா ஹின் மாவட்டத்தில் இன்று (ஏப்.25) காலை 8 மணியளவில் சிறிய ரக காவல் விமானத்தில் அந்நாட்டு காவல் துறை அதிகாரிகள் ... மேலும் பார்க்க