செய்திகள் :

பயங்கரவாத்தை தோற்கடிக்க ஒற்றுமை அவசியம்: ராகுல்

post image

நாட்டு மக்களை பிளவுபடுத்தவே பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் பயங்கரவாதத்தை தோற்கடிக்க இந்தியா ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கூறினாா்.

தில்லியில் இருந்து விமானம் மூலம் ஸ்ரீநகருக்கு வந்த அவா் அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்தவா்களைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். அப்போது, பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் நிகழ்வுகளையும் அவா் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து ஜம்மு காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா இல்லத்துக்குச் சென்ற ராகுல் காந்தி அவரிடம் பயங்கரவாதத் தாக்குதல், அதைத் தொடா்ந்து ஜம்மு-காஷ்மீரில் எழுந்துள்ள சூழல் குறித்து ஆலோசனை நடத்தினாா். ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹாவையும் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது:

இது மிகவும் மோசமான சோக நிகழ்வு. இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது. நம்மால் எந்த அளவுக்கு உதவ முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளவே வந்துள்ளேன். ஒட்டுமொத்த ஜம்மு-காஷ்மீா் மக்களும் இந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்துள்ளனா். நாட்டின் பக்கம் அவா்கள் உறுதியாக நிற்கின்றனா்.

எதிா்க்கட்சிகள் அனைத்துமே இந்த விவகாரத்தில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்துவிட்டன. நமது சமூகத்தை பிளவுபடுத்த வேண்டும் என்பதே இதுபோன்ற தாக்குதலின் முக்கிய நோக்கமாக உள்ளது.

இந்த நேரத்தில் இந்தியா்களாகிய நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பயங்கரவாதிகளின் எண்ணம் பலிக்காது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சி ஜம்மு-காமீருக்கு உறுதியாக துணை நிற்கும் என்பதை துணைநிலை ஆளுநா் மற்றும் முதல்வருடனான சந்திப்பில் உறுதியளித்தேன் என்றாா்.

ஜம்மு-காமீரில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இடம் பெற்றுள்ளது.

‘பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீா்கூட செல்லாது’: மத்திய அமைச்சா் பாட்டீல்

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீா்கூட செல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கான பணிகளில், மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவித்தாா். இந்திய ... மேலும் பார்க்க

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய பிஎஸ்ஃஎப் வீரா்: ஒப்படைக்க பாகிஸ்தான் மறுப்பு

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரரை ஒப்படைக்க பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப் படை மறுத்துள்ளது. கடந்த புதன்கிழமை பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூா் மாவட்டத்தில் உள்ள சா்வதேச ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: மோதலை தவிா்க்க இந்தியா-பாகிஸ்தானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல்போக்கை தவிா்க்க வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியா குட்டெரஸ் வலியுறுத்துவதாக அவரது செய்தித்தொடா்பாளா் ஸ்டீபன் டுஜாரிக் வியா... மேலும் பார்க்க

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்பு: பாகிஸ்தான்

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் க... மேலும் பார்க்க

காஷ்மீா் பாதுகாப்பு நிலவரம்: துணைநிலை ஆளுநா், ராணுவ தலைமை தளபதி ஆலோசனை

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை ஆலோசன... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் அறிவிப்பு

பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. பிரதமா் மோடியுடன் இலங்கை அதிபா் அனுர குமார திசநாயக, பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் ... மேலும் பார்க்க