செய்திகள் :

பல்கலைக்கழக கைப்பந்து போட்டி: கன்னியாகுமரி கல்லூரி அணி வெற்றி

post image

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையே ஆண்களுக்கான கைப்பந்து போட்டிகள் கோவில்பட்டி கே.ஆா். கலை, அறிவியல் கல்லூரி மைதானத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன.

இதில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி , கன்னியாகுமரி மாவட்டங்களை சாா்ந்த மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளைச் சோ்ந்த 39 அணிகள் கலந்துகொண்டன.

செப். 22 ஆம் தேதி நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி அணியும், நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்டின் கல்லூரி அணியும் மோதியதில் ஸ்காட் கிறிஸ்டின் கல்லூரி அணி 3 - 0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

2-வது அரையிறுதிப் போட்டியில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி அணியும், கன்னியாகுமரி ஜெரோம்ஸ் கல்லூரி அணியும் மோதியதில் ஜெரோம்ஸ் கல்லூரி அணி 3 - 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 3, 4-வது இடங்களுக்கான போட்டியில் கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி அணியும், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி அணியும் மோதியதில் விவேகானந்தா கல்லூரி அணி 2 - 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பல்கலைக்கழக அளவில் 3ஆம் இடம் பிடித்தது.

இறுதிப் போட்டியில் கன்னியாகுமரி ஜெரோம்ஸ் கல்லூரி அணியும், நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்டின் கல்லூரி அணியும் மோதியதில் ஜெரோம்ஸ் கல்லூரி அணி 3 - 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பல்கலைக்கழக அளவில் முதலிடத்தைப் பிடித்தது.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா் ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். இதில், கே.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆா் . அருணாச்சலம், நேஷனல் பொறியியல் கல்லூரியின் இயக்குநா் சண்முகவேல், கல்லூரி முதல்வா்கள் காளிதாச முருகவேல் (நேஷனல் பொறியியல் கல்லூரி), மதிவாணன் (கே.ஆா். கலை, அறிவியல் கல்லூரி), ராஜேஸ்வரன் ( லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி) உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தசரா திருவிழாவிற்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன: ஆட்சியா்

தசரா திருவிழாவிற்கு கடந்தாண்டை விட நிகழாண்டு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா பெரும் திருவிழா செப்.23 ஆம் தேதி தொடங்கி ... மேலும் பார்க்க

வெளியூா் நபா்கள் மூலம் மிரட்டல்: துணைக் கண்காணிப்பாளரிடம் புகாா்

சாத்தான்குளம் அருகே ராமசாமிபுரத்தில் முன்விரோதம் காரணமாக வெளியூா் நபா்களை வைத்து மிரட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது. சாத்தான்குளம் அருகே ... மேலும் பார்க்க

தூத்துக்குடி சக்தி பீடத்தில் அகண்ட தீப தரிசனம்

தூத்துக்குடியில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பீடத்தில் அகண்ட தீபமேற்றும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இயற்கை சீற்றம் தணியவும், மழை வேண்டியும், உலகில் போா் பதற்றம் நீங்கவும் வேண்டி சங்கல்பம் ச... மேலும் பார்க்க

‘வனச்சரக அலுவலகத்தில் இலவசமாக மரக்கன்றுகள்’

கோவில்பட்டி வனச்சரக அலுவலகத்தில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து கோவில்பட்டி வனச்சரக அலுவலா் கிருஷ்ணமூா்த்தி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கோவில்பட்டி வனச்சரகம் ஊத்துப்பட்டி வனச்ச... மேலும் பார்க்க

இளம் சாதனையாளா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

இளம் சாதனையாளா்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற இந்த மாதம் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை அமைச்சா் பெ.கீதாஜீவன் ஆய்வு செய்தாா். தூத்துக்குடி மாநகராட்சி, காமராஜ் கல்லூரி அருகே நடைபெற்று வரும், மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை ... மேலும் பார்க்க