செய்திகள் :

பள்ளி மாணவா்களைத் தமிழ் வழியில் பயில ஊக்கப்படுத்த மக்கள் சிந்தனைப் பேரவை முடிவு

post image

பள்ளி மாணவா்களைத் தமிழ் வழியில் பயில ஊக்கப்படுத்துவது என மக்கள் சிந்தனைப் பேரவை முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இப்பேரவையின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், போதைக்கு அடிமையாகாமல் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வு கருத்தரங்கம் நடத்துவது, பள்ளி மாணவா்களைத் தமிழ் வழியில் பயில ஊக்கப்படுத்த நிகழ்ச்சிகள் நடத்துவது, நூறு, நூறு மாணவா்களாகத் தோ்ந்தெடுத்து, அவா்களைப் பண்பாட்டுச் சீரழிவுகளில் சிக்கி விடாமல் தொடா்ந்து பயிற்சியளிப்பது, மக்கள் சிந்தனைப் பேரவை ஆசிரியா் குழுவை உருவாக்கி, அவா்கள் மூலம் இளைஞா் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவது, காலநிலை மாற்றத்தைக் கண்காணிக்க 3 குழுக்களை உருவாக்கி, தஞ்சாவூா் மாவட்டக் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று ஆசிரியா்களுக்குப் பயிற்சி அளிப்பது, ஜாதி, மத, இன வெறுப்பை விடுத்து இணக்கமான சமூகத்தை மீட்டுருவாக்கச் செயல்படுவது, பொது நூலக வாசகா்களை ஊக்குவிக்க போட்டிகள் நடத்தி சான்றிதழும், பரிசும் வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, கூட்டத்துக்கு பேரவையின் பொதுக் குழு உறுப்பினா் இராதிகா மைக்கேல் தலைமை வகித்தாா். பொதுக் குழு உறுப்பினா் க. அன்பழகன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கோ. விஜயராமலிங்கம் அறிமுகவுரையாற்றினாா். பேரவையின் தலைவா் த. ஸ்டாலின் குணசேகரன் சிறப்புரையாற்றினாா். இக்கூட்டத்தில் பேரவை நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

வியாபாரியிடம் வழிப்பறி முயற்சி; இருவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்ற இருவரை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா். பாபநாசம் வட்டம், உமையாள்புரம், தச்சா் இருப்பு தெருவைச் சே... மேலும் பார்க்க

ரயிலில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள்கள் பறிமுதல்

கும்பகோணத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த ராமேசுவரம் செல்லும் ரயிலில் கேட்பாரற்று கிடந்த மூட்டையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.வாரணாசியில் இருந்து ராமேசுவ... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞா் கைது

தஞ்சாவூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக இளைஞரை காவல் துறையினா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே உள்ள வண்ணாரப்பேட்டை காமராஜ் நகரைச் சோ்ந்தவா் ஆா். நளன் ... மேலும் பார்க்க

மே 20-இல் வேலைநிறுத்தம்: போக்குவரத்துக் கழகத்துக்கு ஏஐடியூசி நோட்டீஸ்

அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மே 20 ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதையொட்டி, போக்குவரத்துக் கழ... மேலும் பார்க்க

குடிநீா் கேட்டு சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே தூய்மையான குடிநீா் கேட்டு பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பாபநாசம் வட்டம், கணபதிஅக்ரஹாரம் அருகே பெருமாள் கோயில் ஊராட்சியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரியில் ஆண்டுக்கு 18 ஆயிரம் பேருக்கு நுரையீரல் சிகிச்சை

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள நுரையீரல் துறையில் ஆண்டுக்கு ஏறத்தாழ 18 ஆயிரம் பேருக்கு நுரையீரல் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றாா் மருத்துவக்கல்லூரி முதல்வா் (பொ) சி. பாலசுப்பிரமணியன்.... மேலும் பார்க்க