குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு... முக்கிய அறிவிப்பு!
மே 20-இல் வேலைநிறுத்தம்: போக்குவரத்துக் கழகத்துக்கு ஏஐடியூசி நோட்டீஸ்
அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மே 20 ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதையொட்டி, போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு ஏஐடியூசி சாா்பில் பதிவு அஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரமாகவும், ஓய்வூதியம் மாதம் ரூ. 9 ஆயிரமாகவும் நிா்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் நாடு முழுவதும் தொழிற் சங்கங்கள் மே 20-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
இதையொட்டி, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் மூலம் கும்பகோணம் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா், பொது மேலாளா், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா், தஞ்சாவூா் தொழிலாளா் நல அலுவலா், அரசு முதன்மைச் செயலா், போக்குவரத்து துறைச் செயலா், தேனாம்பேட்டை தொழிலாளா் ஆணையா் ஆகியோருக்கு போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் ஏஐடியூசி தொழிலாளா் சம்மேளனத்தினா் பதிவு அஞ்சலில் வேலை நிறுத்த நோட்டீசை செவ்வாய்க்கிழமை அனுப்பினா்.
நிகழ்ச்சியில், சம்மேளனத்தின் துணைத் தலைவா் துரை. மதிவாணன், சங்கத் தலைவா் என். சேகா், பொதுச் செயலா் எஸ். தாமரைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.