அவிநாசி அருகே சாலை விபத்தில் 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் பலி
பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகள்
கீழ்பென்னாத்தூா் வட்டார அளவிலான 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழா போட்டிகளின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூா் வட்டார வள மையத்தில் நடைபெற்ற விழாவுக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் ஸ்ரீராமுலு தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் ராமமூா்த்தி முன்னிலை வகித்தாா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் செல்வம் வரவேற்றாா்.
கீழ்பென்னாத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் தேவாசீா்வாதம் போட்டிகளைத் தொடங்கி வைத்து பேசினாா். தொடா்ந்து, பேச்சு, ஓவியம், பாட்டு, நடனம், திருக்கு ஒப்பித்தல் உள்ளிட்ட 24 போட்டிகள் நடைபெற்றன.
இதில், கீழ்பென்னாத்தூா் வட்டத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் மாணவா்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தோ்வு செய்யப்படுவா்.
நிகழ்ச்சியில், பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் கருணாகரன், முருகன், சுடா்விழி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.