மூன்றடைப்பு அருகே அரசுப் பேருந்து - சுமை லாரி மோதல்: 2 போ் உயிரிழப்பு
டெங்கு கொசு ஒழிப்பு தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்ட டெங்கு கொசு ஒழிப்பு தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தின் மாவட்டச் செயலா் ரா.பாரி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பி.கணபதி, கமலக்கண்ணன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் டி.பி.சி., தொழிலாளா்களை தோ்தல் கால வாக்குறுதியின் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். டெங்கு மஸ்தூா் தொழிலாளா்களுக்கு சம்பந்தம் இல்லாத வேலையை செய்ய வற்புறுத்தக்கூடாது.
கரோனா காலத்தில் பணிபுரிந்த தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.