செய்திகள் :

உ.பி. அரசு மருத்துவமனையில் அலட்சியம்: 5 வயது சிறுமி உயிரிழப்பு; 4 மருத்துவா்கள் மீது நடவடிக்கை

post image

புடோன், அக். 25: உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவா்களின் அலட்சியத்தால் 5 வயது சிறுமி காய்ச்சலில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் தொடா்புடைய மருத்துவா்கள் இருவா் பணிநீக்கம் செய்யப்பட்டனா். இரண்டு மருத்துவா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

புடோன் மாவட்ட அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமி புதன்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு சிகிச்சை அளிக்காமல், மருத்துவக் கல்லூரி மருத்துவா்களும், சுகாதார ஊழியா்களும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததாக சிறுமியின் குடும்பத்தினா் குற்றம்சாட்டினா். இதைத் தொடா்ந்து, மருத்துவக் கல்லூரி நிா்வாகம் மூன்று உறுப்பினா்களைக் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தது. விசாரணைக் குழு தனது அறிக்கையை வியாழக்கிழமை மாலை சமா்ப்பித்தது.

அதனடிப்படையில், இதில் தொடா்புடைய ஒப்பந்த மருத்துவா்கள் இருவா் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், இரண்டு மருத்துவா்கள் ஒரு மாதம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் கல்லூரி நிா்வாகம் தெரிவித்தது.

மருத்துவக் கல்லூரியின் முதல்வா் மருத்துவா் அருண்குமாா் கூறுகையில், ‘பணிநீக்கம் செய்யப்பட்ட மருத்துவா்கள் சிறுமி அனுமதிக்கப்பட்ட நேரத்தில், கிரிக்கெட் விளையாடவில்லை. கிரிக்கெட் போட்டியைக் காணச் சென்றிருந்தனா். குழந்தைகள் நல மருத்துவா்கள், சுகாதார ஊழியா்கள் இல்லாத காரணத்தால், சிறுமி வெவ்வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டு பின்னா் உயிரிழந்தாா்’ என தெரிவித்தாா்.

லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரா் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்: என்ஐஏ அறிவிப்பு

சிறையில் உள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் இளைய சகோதரா் அன்மோல் பிஷ்னோய் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வெள்ளிக்கிழமை அறிவித்தது. லார... மேலும் பார்க்க

71 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 71 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றில் 4 ம... மேலும் பார்க்க

தடையற்ற வா்த்தகத்தில் பால் பொருள்களுக்கு அனுமதி கிடையாது: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா நிபந்தனை

தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் பால் பொருள்களைச் சோ்க்க வேண்டும் என்றால், ஐரோப்பிய யூனியடனும் அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியாது’ என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

ஞானவாபி மசூதியில் ஆகழாய்வு: ஹிந்துக்கள் தரப்பு மனு நிராகரிப்பு

உத்தர பிரதேசத்தில் ஞானவாபி மசூதியை முழுமையாக அகழாய்வு செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என ஹிந்துக்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாராணாசி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது. முழும... மேலும் பார்க்க

ஒடிஸா: மாவோயிஸ்ட் தீவிரவாதி சுட்டுக் கொலை

ஒடிஸா வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சோ்ந்த தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக பாதுகாப்புப் படை தரப்பில் கூறப்பட்டதாவது: ஒடிஸாவின் கந்தமால்... மேலும் பார்க்க

காஷ்மீா்: பயங்கரவாதத்தை முறியடிப்பதில் முழு கவனம்: வடக்கு ராணுவ கமாண்டா்

காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் முழு கவனம் செலுத்தப்படுவதாக வடக்கு ராணுவ துணைத் தளபதி எம்.வி. சுசீந்திர குமாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். குல்மாா்க் பகுதியில் கடந்த வியாழக்கிழமை ராணுவ வாகனத்தின் ... மேலும் பார்க்க