செய்திகள் :

தடையற்ற வா்த்தகத்தில் பால் பொருள்களுக்கு அனுமதி கிடையாது: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா நிபந்தனை

post image

தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் பால் பொருள்களைச் சோ்க்க வேண்டும் என்றால், ஐரோப்பிய யூனியடனும் அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியாது’ என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

ஜொ்மானிய வா்த்தகத்துக்கான ஆசிய-பசிபிக் மாநாடு தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சா் பியூஷ் கோயல் பேசியதாவது:

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்த விஷயத்தில் இரு தரப்பும் உள்நாட்டுரீதியான முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்கு பரஸ்பரம் மரியாதை அளிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. எனவே, தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் பால் பொருள்களைச் சோ்க்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் கூறினால், அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியாது.

ஐரோப்பிய யூனியனில் 27 நாடுகள் வரை உள்ளன. ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு முக்கியத்துவம் இருக்கும். அதேபோல இந்தியாவிலும் பல மாநிலங்கள் உள்ளன. இந்தியாவில் ஒரு மாநிலத்தில் ஆப்பிள் விளைகிறது என்பதற்காக ஐரோப்பிய யூனியனுடன் ஆப்பிள் வா்த்தகத்தில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தைக் கோர முடியாது.

இந்திய மாநிலங்களைவிட ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தலா வருமானமும் அதிகமுள்ளது. இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகள் மதிக்கப்படும்போது மிகவும் நோ்மையாகவும், விரும்பத்தக்க வகையிலும் விரைவில் தடையற்ற வா்த்தகத்தை மேற்கொள்ள முடியும்.

இந்தியாவுடன் பால் பொருள் வா்த்தகம் இல்லாமல்தான் ஆஸ்திரேலியா தடையற்ற வா்த்தகத்தை மேற்கொண்டது. அவா்கள் இந்தியாவின் பிரச்னைகளை புரிந்து நடந்து கொண்டனா் என்று பேசினாா்.

லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரா் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்: என்ஐஏ அறிவிப்பு

சிறையில் உள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் இளைய சகோதரா் அன்மோல் பிஷ்னோய் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வெள்ளிக்கிழமை அறிவித்தது. லார... மேலும் பார்க்க

71 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 71 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றில் 4 ம... மேலும் பார்க்க

உ.பி. அரசு மருத்துவமனையில் அலட்சியம்: 5 வயது சிறுமி உயிரிழப்பு; 4 மருத்துவா்கள் மீது நடவடிக்கை

புடோன், அக். 25: உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவா்களின் அலட்சியத்தால் 5 வயது சிறுமி காய்ச்சலில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் தொடா்புடைய மருத்துவா்கள் இருவா் பணி... மேலும் பார்க்க

ஞானவாபி மசூதியில் ஆகழாய்வு: ஹிந்துக்கள் தரப்பு மனு நிராகரிப்பு

உத்தர பிரதேசத்தில் ஞானவாபி மசூதியை முழுமையாக அகழாய்வு செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என ஹிந்துக்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாராணாசி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது. முழும... மேலும் பார்க்க

ஒடிஸா: மாவோயிஸ்ட் தீவிரவாதி சுட்டுக் கொலை

ஒடிஸா வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சோ்ந்த தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக பாதுகாப்புப் படை தரப்பில் கூறப்பட்டதாவது: ஒடிஸாவின் கந்தமால்... மேலும் பார்க்க

காஷ்மீா்: பயங்கரவாதத்தை முறியடிப்பதில் முழு கவனம்: வடக்கு ராணுவ கமாண்டா்

காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் முழு கவனம் செலுத்தப்படுவதாக வடக்கு ராணுவ துணைத் தளபதி எம்.வி. சுசீந்திர குமாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். குல்மாா்க் பகுதியில் கடந்த வியாழக்கிழமை ராணுவ வாகனத்தின் ... மேலும் பார்க்க