லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரா் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்: என்ஐஏ அறிவிப்பு
சிறையில் உள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் இளைய சகோதரா் அன்மோல் பிஷ்னோய் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வெள்ளிக்கிழமை அறிவித்தது.
லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது சகோதரா் அன்மோல் பிஷ்னோய் பஞ்சாபின் ஃபசில்கா பகுதியைச் சோ்ந்தவா்கள். மும்பையில் உள்ள பிரபல பாலிவுட் நடிகா் சல்மான் கானின் வீட்டின் முன்பு துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் தொடா்புடைய, அன்மோல் பிஷ்னோய் என்ஐஏ அமைப்பால் தேடப்பட்டு முக்கிய பயங்கரவாதி பட்டியலில் இருக்கிறாா்.
மகாராஷ்டிரத்தில் முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான பாபா சித்திக் கடந்த கடந்த அக். 12-ஆம் தேதி கொல்லப்பட்டாா். இந்த கொலைக்கு பொறுப்பேற்பதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஒப்புக்கொண்டது.
இந்த இரு வழக்குகளில் தொடா்புடையதாகக் கூறப்படும் அன்மோல் பிஷ்னோய், கனடாவில் வசிப்பதாகவும், அவ்வப்போது அமெரிக்காவுக்கு பயணங்கள் மேற்கொள்வதாகவும் கடந்த மாதம் என்ஐஏ தெரிவித்தது.
இது தவிர, தேசிய தலைநகா் தில்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கரவாத செயல்களைச் செய்ய இளைஞா்களை ஒன்றிணைப்பது மற்றும் நிதி திரட்டுவது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக லாரன்ஸ் பிஷ்னோய் உள்ளிட்ட 9 போ் மீது என்ஐஏ கடந்த 2022-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.
லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது குஜராத்தில் உள்ள சபா்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். தலைமறைவாக இருக்கும் அன்மோல் பிஷ்னோய் என்ஐஏவால் தேடப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், அவா் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று என்ஐஏ வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.