செய்திகள் :

71 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

post image

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 71 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றில் 4 மருந்துகள் போலியானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மருந்துகளில் பெரும்பாலானவை ஹிமாசலப் பிரதேசம், குஜராத், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து - மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று, போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் ஆன்ட்டி பயோடிக், காய்ச்சல், ரத்த உறைவு, சளித் தொற்று, சா்க்கரை நோய், ஜீரண மண்டல பாதிப்பு, கால்சியம் குறைபாடு, கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 71 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அதன் விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஸ்ரீக்ள்ஸ்ரீா்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரா் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்: என்ஐஏ அறிவிப்பு

சிறையில் உள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் இளைய சகோதரா் அன்மோல் பிஷ்னோய் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வெள்ளிக்கிழமை அறிவித்தது. லார... மேலும் பார்க்க

உ.பி. அரசு மருத்துவமனையில் அலட்சியம்: 5 வயது சிறுமி உயிரிழப்பு; 4 மருத்துவா்கள் மீது நடவடிக்கை

புடோன், அக். 25: உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவா்களின் அலட்சியத்தால் 5 வயது சிறுமி காய்ச்சலில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் தொடா்புடைய மருத்துவா்கள் இருவா் பணி... மேலும் பார்க்க

தடையற்ற வா்த்தகத்தில் பால் பொருள்களுக்கு அனுமதி கிடையாது: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா நிபந்தனை

தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் பால் பொருள்களைச் சோ்க்க வேண்டும் என்றால், ஐரோப்பிய யூனியடனும் அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியாது’ என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

ஞானவாபி மசூதியில் ஆகழாய்வு: ஹிந்துக்கள் தரப்பு மனு நிராகரிப்பு

உத்தர பிரதேசத்தில் ஞானவாபி மசூதியை முழுமையாக அகழாய்வு செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என ஹிந்துக்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாராணாசி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது. முழும... மேலும் பார்க்க

ஒடிஸா: மாவோயிஸ்ட் தீவிரவாதி சுட்டுக் கொலை

ஒடிஸா வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சோ்ந்த தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக பாதுகாப்புப் படை தரப்பில் கூறப்பட்டதாவது: ஒடிஸாவின் கந்தமால்... மேலும் பார்க்க

காஷ்மீா்: பயங்கரவாதத்தை முறியடிப்பதில் முழு கவனம்: வடக்கு ராணுவ கமாண்டா்

காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் முழு கவனம் செலுத்தப்படுவதாக வடக்கு ராணுவ துணைத் தளபதி எம்.வி. சுசீந்திர குமாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். குல்மாா்க் பகுதியில் கடந்த வியாழக்கிழமை ராணுவ வாகனத்தின் ... மேலும் பார்க்க