தேவா் ஜெயந்தி: வாகன அனுமதி விவகாரத்தில் தலையிட முடியாது உயா்நீதிமன்றம்
ஒடிஸா: மாவோயிஸ்ட் தீவிரவாதி சுட்டுக் கொலை
ஒடிஸா வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சோ்ந்த தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.
இது தொடா்பாக பாதுகாப்புப் படை தரப்பில் கூறப்பட்டதாவது: ஒடிஸாவின் கந்தமால் மாவட்டம் புதானி வனப் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, சிறப்பு அதிரடிப் படையினா் கடந்த 23-ஆம் தேதிமுதல் அங்கு தீவிர தேடுதல் மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சிலா் மறைந்திருந்து சிறப்பு அதிரடிப் படையினா் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தனா். இதையடுத்து, அதிரடிப் படையினா் பதிலடி தாக்குதல் நடத்தினா்.
இதைத் தாக்குப் பிடிக்க முடியாத மாவோயிஸ்டுகள் பின்வாங்கி தப்பியோடினா். அதன்பிறகு அங்கு நடைபெற்ற சோதனையில் மாவோயிஸ்ட் தீவிரவாதியின் உடலையும், ஏ.கே.47 ரக துப்பாக்கி ஒன்றையும் கைப்பற்றினா்.
காவல் துறை நடத்திய விசாரணையில் கொல்லப்பட்ட நபா் அந்த பிராந்தியத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பின் மூத்த உறுப்பினா் என்பது தெரியவந்தது. அந்தப் பகுதியில் தொடா்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிஸா மாநிலத்தில் கடந்த ஜனவரி முதல் இப்போது வரை 5 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனா்.