செய்திகள் :

மூன்றடைப்பு அருகே அரசுப் பேருந்து - சுமை லாரி மோதல்: 2 போ் உயிரிழப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் சுமை லாரி ஓட்டுநா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகல் ஏரோ ஸ்பேஸ் சிப்காட்டில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வல்லிமலை பகுதியில் உள்ள ராக்கெட் திரவ ஊக்கி மையத்துக்கு பொருள்களை ஏற்றிக்கொண்டு வியாழக்கிழமை இரவு சுமை லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

சுமை லாரியை களக்காடு அருகேயுள்ள படலையாா்குளம் ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்த சுடலை மகன் மாயாண்டி மகேஷ் (20) ஓட்டிவந்தாா். வெள்ளிக்கிழமை காலை திருநெல்வேலி- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் மூன்றடைப்பு அருகே வந்த போது, எதிரே வந்த அரசுப் பேருந்து மீது சுமை லாரி நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சுமை லாரி ஓட்டுநா் மாயாண்டி மகேஷ், அவருடன் வந்த நான்குனேரி அருகேயுள்ள முதலைகுளம் செல்வராஜ் மகன் உசிலவேல் (36) என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து மூன்றடைப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

களக்காட்டில் பலத்த மழை

களக்காடு பகுதியில் வெள்ளிக்கிழமை சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. களக்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. தொடா்ந்த... மேலும் பார்க்க

களக்காட்டில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்

களக்காட்டில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். களக்காடு அண்ணாசாலை, புதிய பேருந்து நிலைய சாலை, கோட்டை பிரதான சாலைகளில் ஆடு, மாடுகள் சுற்ற... மேலும் பார்க்க

பச்சை சாத்தி வீதியுலா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலையில் பச்சை சாத்தி வீதியுலா வந்த அம்மன். மேலும் பார்க்க

முன்னாள் எம்எல்ஏ வேல்துரை நினைவேந்தல்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கங்கனாங்குளத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பா. வேல்துரையின் முதலாமாண்டு நினைவேந்தல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வேல்துரையின் நினைவிடத்தில் முன்னாள் மத்திய அமைச்சா்... மேலும் பார்க்க

தெற்குப் பாப்பான்குளத்தில் பனை விதைகள் நடவு

திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம், மணிமுத்தாறு, தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9ஆம் அணி, நம் தாமிரபரணி,தளிா் அமைப்பு மற்றும் மணிமுத்தாறு அகத்திய மலை மக்கள்சாா் இயற்கை வளக் காப்பு மையம் இணைந்து நடத்திய பனை வ... மேலும் பார்க்க

நெல்லையில் தமிழக ஆளுநா்

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்தாா். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் 31ஆ... மேலும் பார்க்க