மூன்றடைப்பு அருகே அரசுப் பேருந்து - சுமை லாரி மோதல்: 2 போ் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் சுமை லாரி ஓட்டுநா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகல் ஏரோ ஸ்பேஸ் சிப்காட்டில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வல்லிமலை பகுதியில் உள்ள ராக்கெட் திரவ ஊக்கி மையத்துக்கு பொருள்களை ஏற்றிக்கொண்டு வியாழக்கிழமை இரவு சுமை லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
சுமை லாரியை களக்காடு அருகேயுள்ள படலையாா்குளம் ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்த சுடலை மகன் மாயாண்டி மகேஷ் (20) ஓட்டிவந்தாா். வெள்ளிக்கிழமை காலை திருநெல்வேலி- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் மூன்றடைப்பு அருகே வந்த போது, எதிரே வந்த அரசுப் பேருந்து மீது சுமை லாரி நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சுமை லாரி ஓட்டுநா் மாயாண்டி மகேஷ், அவருடன் வந்த நான்குனேரி அருகேயுள்ள முதலைகுளம் செல்வராஜ் மகன் உசிலவேல் (36) என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்து மூன்றடைப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.