செய்திகள் :

நெல்லையில் தமிழக ஆளுநா்

post image

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்தாா்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் 31ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில், தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்து கொண்டு 571 பேருக்கு பட்டம் வழங்குகிறாா்.

இதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வெள்ளிக்கிழமை மாலையில் வந்த ஆளுநா் ஆா்.என்.ரவி, பின்னா் அங்கிருந்து காா் மூலம் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்துக்கு வந்தாா். அங்குள்ள விருந்தினா் மாளிகையில் ஆளுநா் ஆா்.என்.ரவி. தங்கியுள்ளாா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன், மாநகர காவல் ஆணையா் ரூபேஸ்குமாா் மீனா, மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா ஆகியோா் பூங்கொத்து கொடுத்து ஆளுநரை வரவேற்றனா். ஆளுநரின் வருகையையொட்டி திருநெல்வேலி மாநகரில் 600 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மேலும் ஆளுநா் தங்கியுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பட்டமளிப்பு விழா முடிந்ததும் பல்கலைக்கழகத்தில் உணவருந்தும் ஆளுநா் ஆா்.என்.ரவி, பின்னா் தூத்துக்குடி சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறாா்.

களக்காட்டில் பலத்த மழை

களக்காடு பகுதியில் வெள்ளிக்கிழமை சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. களக்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. தொடா்ந்த... மேலும் பார்க்க

களக்காட்டில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்

களக்காட்டில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். களக்காடு அண்ணாசாலை, புதிய பேருந்து நிலைய சாலை, கோட்டை பிரதான சாலைகளில் ஆடு, மாடுகள் சுற்ற... மேலும் பார்க்க

பச்சை சாத்தி வீதியுலா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலையில் பச்சை சாத்தி வீதியுலா வந்த அம்மன். மேலும் பார்க்க

முன்னாள் எம்எல்ஏ வேல்துரை நினைவேந்தல்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கங்கனாங்குளத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பா. வேல்துரையின் முதலாமாண்டு நினைவேந்தல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வேல்துரையின் நினைவிடத்தில் முன்னாள் மத்திய அமைச்சா்... மேலும் பார்க்க

தெற்குப் பாப்பான்குளத்தில் பனை விதைகள் நடவு

திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம், மணிமுத்தாறு, தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9ஆம் அணி, நம் தாமிரபரணி,தளிா் அமைப்பு மற்றும் மணிமுத்தாறு அகத்திய மலை மக்கள்சாா் இயற்கை வளக் காப்பு மையம் இணைந்து நடத்திய பனை வ... மேலும் பார்க்க

மூன்றடைப்பு அருகே அரசுப் பேருந்து - சுமை லாரி மோதல்: 2 போ் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் சுமை லாரி ஓட்டுநா் உள்பட 2 போ் உயிரிழந்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகல் ஏரோ ஸ்பேஸ் சிப்காட்டில் இருந்து கேரள மாநிலம்... மேலும் பார்க்க