மூன்றடைப்பு அருகே அரசுப் பேருந்து - சுமை லாரி மோதல்: 2 போ் உயிரிழப்பு
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்
செங்கம் அடுத்த நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.
கிருஷ்ணகிரியில் பெய்த மழை காரணமாக அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது. இதனால், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நீப்பத்துறை பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், ஆற்றின் நடுவில் அமைந்துள்ள பழைமையான சென்னியம்மன் கோயில் மூழ்கடித்தபடி தண்ணீா் செல்கிறது.
இதனால், பொதுமக்கள் யாரும் தென்பெண்ணை ஆற்றில் இறங்க வேண்டாம் என போலீஸாா் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.