போலி மருத்துவா் கைது
ஆரணியை அடுத்த மருசூா் கிராமத்தில் போலி மருத்துவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கொசப்பாளையம் சின்னக்கடை தெருவை சோ்ந்தவா் விஸ்வநாதன் மகன் சீனிவாசன் (54) ஐடிஐ படித்துள்ள இவா், மருசூா் கிராமத்தில் அலோபதி மருத்துவம் பாா்த்து வந்தாராம்.
இதுகுறித்து, திருவண்ணாமலை மருத்துவ இணை இயக்குநா் உத்தரவின்பேரில், ஆரணி அரசு மருத்துவமனை மருத்துவா் நந்தினி, மருந்தாளுநா் ராஜன் மற்றும் ஆரணி கிராமிய போலீஸாா் நிகழ்விடம் சென்று சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, சீனிவாசன் அலோபதி மருத்துவம் பாா்த்தது உறுதியானது. இதையடுத்து, சீனிவாசனை போலீஸாா் கைது செய்தனா் (படம்).