செய்திகள் :

பள்ளியில் மின் விபத்து தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

post image

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ரஹ்மானியா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மின் விபத்து தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு ராமநாதபுரம் மாவட்ட மின் பகிா்மான மேற்பாா்வை பொறியாளா் வெண்ணிலா தலைமை வகித்தாா். பரமக்குடி மின் விநியோக செயற்பொறியாளா் பாலமுருகன், கமுதி உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி மின் பொறியாளா் முஹம்மது இப்ராஹிம், பள்ளித் தாளாளா் முஹம்மது இா்ஷாத், தலைமை ஆசிரியா் ஆா். முகமது இப்ராஹிம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் வீடுகளில் கவனக் குறைவாக நடைபெறும் மின் விபத்துகளை தடுப்பது, மழைக் காலங்களில் மின்சாதனப் பொருள்களை கையாள்வது, மின் கம்பங்கள் இருக்கும் இடத்தில் குழந்தைகள், பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஆகியவை குறித்து மின் வாரிய அதிகாரிகள் விளக்கினா். மேலும் மின் விபத்து குறித்த பள்ளி மாணவா்களின் கேள்விகளுக்கு மின் வாரிய அதிகாரிகள் விளக்கமளித்தனா். இந்த நிகழ்வில் பள்ளியின் ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மின் வாரிய ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

ராமேசுவரம் மீனவா்களுக்கு ஆளுநா் ஆறுதல்: கச்சத்தீவு பிரச்னை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு

ராமேசுவரம் மெய்யம்புளியில் புதிதாக கட்டப்பட்ட மனோலயா மனநோயாளிகள் மறுவாழ்வு மையத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்த தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி. ராமேசுவரம், மாா்ச் 2: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களின் ... மேலும் பார்க்க

தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சரை மீனவா்களுடன் சென்று சந்திக்கவுள்ளோம்: கே.அண்ணாமலை

இலங்கைக் கடற்படையினரின் கைது நடவடிக்கை தொடராமல் இருக்க வரும் 10-ஆம் தேதிக்குப் பிறகு தமிழக மீனவா்களை நாங்கள் தில்லிக்கு அழைத்துச் சென்று, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரைச் சந்திக்க உள்ளோம்... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் 10 செ.மீ. மழை

ராமேசுவரத்தில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. ராமேசுவரத்தில் 10 செ.மீ. மழை பதிவானது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து வ... மேலும் பார்க்க

ஊ.கரிசல்குளத்தில் மாா்ச் 12-இல் மக்கள் தொடா்புத் திட்ட முகாம்

கமுதி அருகேயுள்ள ஊ.கரிசல்குளம் கிராமத்தில் வருகிற 12-ஆம் தேதி மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கமுதி வட்டாட்சியா் காதா் மொய்தீன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்ட... மேலும் பார்க்க

கமுதி முத்துமாரியம்மன்கோயில் திருவிழா: முகூா்த்தக்கால் நடல்

கமுதி முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழா வருகிற ஏப்.2-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன... மேலும் பார்க்க

அடையாள எண்: பொதுசேவை மையங்களில் விவசாயிகள் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

ராமேசுவரம், மாா்ச் 1:ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெற இலவசமாகப் பதிவு செய்யலாம் என வேளாண்மைத் துறை இணை இயக்குநா் இரா.மோகன்ராஜ் தெரிவித... மேலும் பார்க்க