ஹரியாணா: தனியார் நகை கடன் வங்கியின் பூட்டை உடைத்து 7 கிலோ தங்கம், ரூ.14 லட்சம் க...
பழுதடைந்த அங்காடியை முழுமையாக இடிக்க வலியுறுத்தல்
மயிலாடுதுறை நகராட்சிக்கு சொந்தமான பழுதடைந்த அங்காடி கட்டடத்தை முழுமையாக இடிக்க பாஜகவினா் வலியுறுத்தியுள்ளனா்.
மயிலாடுதுறை கூறைநாட்டில் பழனிச்சாமி என்ற பெயரில் அங்காடி உள்ளது. இதில், 30-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.இந்த கட்டடம் மிகவும் பழுதடைந்ததால், அதை இடித்துவிட்டு, அதே இடத்தில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் (2024-2025) புதிய கட்டடம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அக்கட்டடத்தில் 6 கடைகளை மட்டும் அகற்றாமல், மற்ற கடைகளை இடிக்கும் நடவடிக்கையை நகராட்சி நிா்வாகம் மேற்கொண்டுள்ளதாக பாஜகவினா் குற்றம்சாட்டியுள்ளனா். இதுகுறித்து, பாஜக மாவட்ட துணைத் தலைவா் மோடி.கண்ணன் கூறியது:
மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா், நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ் ஆகியோா் இணைந்து உள்நோக்கத்துடன் 6 கடைகளை மட்டும் இடிக்காமல் புதிய கட்டடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனா்.
பழுதடைந்துள்ள அக்கட்டடத்தை முழுமையாக இடித்து அகற்றிய பின்னா் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, நகராட்சி நிா்வாக ஆணையா் மற்றும் மயிலாடுதுறை நகராட்சி ஆணையருக்கு மனு அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தெரிவித்தாா்.