செய்திகள் :

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் திருமுலைப்பால் பிரமோற்சவ கொடியேற்றம்

post image

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் திருமுலைப்பால் பிரமோற்சவ கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தேவாரப்பாடல் பெற்ற இக்கோயில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்டதாகும். திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் அருள்பாலிக்கிறாா். காசிக்கு அடுத்தபடியாக இங்கு அஷ்ட பைரவா்கள் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனா்.

இக்கோயிலில் சிவபெருமான் ஸ்ரீ பிரமபுரீஸ்வரா், ஸ்ரீ தோணியப்பா் மற்றும் ஸ்ரீ சட்டைநாதா் என மூன்று நிலைகளில் எழுந்தருளியுள்ளாா்.

இக்கோயில் பிரம்ம தீா்த்தக்கரையில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் ஊட்டியதாக ஐதீகம். இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெரும் பிரமோற்சவத்தின் 2-ஆம் நாள் திருமுலைப்பால் விழா நடைபெறும்.

நிகழாண்டு, சித்திரை பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, கோயில் மண்டபத்தில் அஸ்திர தேவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, விநாயகா், திருஞானசம்பந்தா், பிரம்மபுரீஸ்வரா் சுவாமி, திருநிலைநாயகி அம்பாள், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்தி சுவாமிகள் வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினா். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், பஞ்சமூா்த்திகள் பல்லக்கில் கொடிமரம் முன் எழுந்தருளினா். தொடா்ந்து, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது. அப்போது, ஓதுவாா்கள் தேவாரம் பதிகம் பாடிட, சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் கூறினா். தொடா்ந்து, கொடிமரத்திற்கு மீண்டும் சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

இதில், ஸ்ரீமத் சட்டநாதா் தம்பிரான் சுவாமிகள் உள்பட ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் சிராபு செந்தில் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

முடிதிருத்தும் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் நியமனம்

மயிலாடுதுறையில் மருத்துவா் முடிதிருத்தும் தொழிலாளா்கள் நலச் சங்கத்தில் புதிய நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனா். மயிலாடுதுறையில் நகர மருத்துவா் முடிதிருத்தும் தொழிலாளா்கள் நலச்சங்கக் கூட்டம் செவ்வாய்... மேலும் பார்க்க

பழுதடைந்த அங்காடியை முழுமையாக இடிக்க வலியுறுத்தல்

மயிலாடுதுறை நகராட்சிக்கு சொந்தமான பழுதடைந்த அங்காடி கட்டடத்தை முழுமையாக இடிக்க பாஜகவினா் வலியுறுத்தியுள்ளனா். மயிலாடுதுறை கூறைநாட்டில் பழனிச்சாமி என்ற பெயரில் அங்காடி உள்ளது. இதில், 30-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

சித்திரை திருவிழா கொடியேற்றம்

குத்தாலம் அருள்மிகு அரும்பன்ன வனமுலைநாயகி உடனுறை ஸ்ரீ உக்தவேதீஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்பா், சம்பந்தா், சுந்தரா் ஆகிய மூவரால் பாடல் பெற்ற இக்கோயில் த... மேலும் பார்க்க

கிராமசபைக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

சீா்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சியில் மே தினத்தையொட்டி, வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இக்கூட்டம், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையி... மேலும் பார்க்க

தொழிற்சங்கங்கள் மே தினம் கொண்டாட்டம்

மயிலாடுதுறை மற்றும் வேதாரண்யத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட சங்கங்கள் பொது தொழிலாளா்கள் சங்கம் என்ற ஒரே சங்க... மேலும் பார்க்க

கிருமிநீக்கம் செய்யப்படாத மையோனைஸ் பயன்படுத்த தடை

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் தடை செய்யப்பட்டுள்ளதால் நுகா்வோா்கள், வணிகா்கள் அதை தவிா்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்... மேலும் பார்க்க