செய்திகள் :

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்! ஏன்?

post image

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்தவர், கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

கனடாவில் வசித்து வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஷாஜீப் கான் என்பவர், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பொருள் உதவி செய்ய முயற்சித்ததாகவும், அமெரிக்காவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயற்சித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு அந்நாட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், ஷாஜீப் கானை நாடு கடத்தியிருப்பதாக அமெரிக்காவின் எஃப்பிஐ இயக்குநர் காஷ் படேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காஷ் படேல் வெளியிட்ட பதிவில்,

“ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பொருள் உதவி வழங்க முயன்றதற்காகவும், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட முயன்றதாகவும் குற்றச்சாட்டப்பட்ட பாகிஸ்தான் குடிமகன் ஷாஜீப் கான், அமெரிக்காவுக்கு இன்று பிற்பகல் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதத் தாக்குதலின் ஓராண்டு நினைவு நாளாக அக்டோபர் 7, 2024 அன்று, கனடாவில் இருந்து நியூ யார்க்கிற்கு வந்து புரூக்ளினில் உள்ள யூத மையத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக மிகப்பெரிய துப்பாக்கிச் சூட்டை ஷாஹீப் நடத்த திட்டமிட்டார்.

அதிர்ஷடவசமாக அந்த திட்டத்தை எஃப்பிஐ முறியடித்தது. மேலும், செப்டம்பர் 4, 2024 அன்று கனடா காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அமெரிக்காவுக்கு அழைத்துவரப்பட்டு நீதியை எதிர்கொள்வார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்காவில் இருந்து அழைத்துவரப்படும் முகமது ஷாஜீப் கான் (20), ஜூன் 11 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அமெரிக்க நீதித்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுகாலப் போர்! ரஷிய வீரர்கள் 10 லட்சம் பேர் பலி !

ரஷிய வீரர்கள் 10 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.நேட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்தததை எதிர்த்த ரஷியா, உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான போரை நி... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலீஸ் மக்கள் போராட்டம்: 400 பேர் கைது!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக, லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து அமெரிக்... மேலும் பார்க்க

ஹவாய்: 6 மாதங்களில் 25 முறை வெடித்த எரிமலை!

அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிலாயூயா எரிமலை கடந்த 6 மாதங்களில் 25வது முறையாக வெடித்து சீற்றமடைந்துள்ளது. உலகில் அதிக சீற்றமுடைய எரிமலைகளில் ஒன்றான, ஹவாய் பெரிய தீவில் அமைந்துள்ள கிலாயூயா எரிமலை, நேற... மேலும் பார்க்க

அமெரிக்காவில் காட்டுத் தீ! 700 குடும்பங்கள் வெளியேற்றம்!

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், அப்பகுதிகளில் வசித்த சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஓரிகனின் கொலம்பியா ஆற்று கனவாய... மேலும் பார்க்க

50 போட்டிக் குழுவினரைக் கொன்ற ஹமாஸ்

காஸாவில் இஸ்ரேல் உதவியுடன் தங்களுக்கு எதிராகச் செயல்படும் அபு ஷபாப் குழுவைச் சோ்ந்த 50 பேரை ஹமாஸ் படையினா் கொன்றுள்ளனா். இது குறித்து அபு ஷபாப் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு எதிரான போராட்டம்: லாஸ் ஏஞ்சலீஸில் ஊரடங்கு உத்தரவு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து அங்கு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டத... மேலும் பார்க்க