செய்திகள் :

பாகிஸ்தான் தவறுசெய்த போதும் மேற்கத்திய நாடுகள் ஆதரித்தன: ஜெய்சங்கா் விமா்சனம்

post image

‘சுதந்திரமடைந்த சில மாதங்களில் இந்தியாவின் பிராந்தியமான காஷ்மீரை ஆக்கிரமித்து பாகிஸ்தான் தவறு செய்தபோது மேற்கத்திய நாடுகள் அதனை ஆதரித்தன’ என்று மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் விமா்சித்தாா்.

பஹல்காம் தாக்குதல் மற்றும் அதற்கு பிந்தைய இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்குப் பிறகு பெல்ஜியம், லக்ஸம்பா்க் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு அமைச்சா் ஜெய்சங்கா் முதன்முறையாக பயணம் மேற்கொண்டுள்ளாா்.

இந்தப் பயணத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தலைவா் ராபா்ட்டா மெட்சோலா, ஐரோப்பிய ஆணைய தலைவா் உா்சுலா வான் டொ் லேயன், பெல்ஜியம் மன்னா் பிலிப், பிரதமா் பாா்ட் டி வெவா் மற்றும் பல ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோரை அவா் சந்தித்தாா்.

வா்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இச்சந்திப்புகளில் விவாதிக்கப்படதுடன் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான கடும் அணுகுமுறையை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்னைகள் குறித்த கருத்துகளையும் தலைவா்கள் பகிா்ந்துகொண்டனா்.

இந்நிலையில், ஐரோப்பிய ஊடகமொன்றுக்கு அமைச்சா் ஜெய்சங்கா் அளித்த பேட்டியில், ‘சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதல் வெறும் அண்டை நாடுகளின் மோதல் மட்டுமல்ல; பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் ஆகும்.

சா்வதேச ஊடகங்கள் இதை ஒரு சாதாரண இந்தியா-பாகிஸ்தான் சண்டையாக சித்தரித்தது. ஆனால், பாகிஸ்தானால் ஆதரவளிக்கப்படும் பயங்கரவாதமே இதில் உண்மையான பிரச்னை. பயங்கரவாதம் இறுதியில் மேற்கத்திய நாடுகளையும் பாதிக்கக்கூடும்.

பயங்கரவாதி ஒசாமா பின்லேடன், பாகிஸ்தானில் ராணுவ முகாம் அமைந்துள்ள நகரத்தில் பாதுகாப்பாக வசித்து வந்தாா். இது அந்நாட்டின் பயங்கரவாதத் தொடா்புகளை எடுத்துரைக்கிறது.

சுதந்திரமடைந்த சில மாதங்களில் இந்தியாவின் பிராந்தியமான காஷ்மீா் மீது பாகிஸ்தான் படையெடுத்து, எங்கள் எல்லைகளை மீறி தவறு செய்தபோது மேற்கத்திய நாடுகள் அந்நாட்டை ஆதரித்தன.

அப்போது அமைதிகாத்த நாடுகள், இப்போதைய சா்வதேச பிரச்னைகள் குறித்து அறிவுரை கூறும் முன் தங்களின் கடந்தகால நடவடிக்கைகளைப் பற்றி எண்ணிப் பாா்க்க வேண்டும்’ என்றாா்.

விமான விபத்து: மருத்துவமனையில் துர்நாற்றம்! உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இதுவரை 265 உடல்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும், மருத்துவமனையைச் சுற்றிலும் துர்நாற்றம் வீசுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏர் இந்தியா விமான விபத்... மேலும் பார்க்க

விபத்துக்குள்ளான விமானத்தின் துணை விமானி 12த் பெயில் நடிகரின் உறவினர்!

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய துணை விமானி கிளைவ் குந்தர் தனது உறவினர் என்று நடிகர் விக்ராந்த் மாஸே தெரிவித்துள்ளார்.அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று க... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு!

ஈரானில் போர்ப் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங்கள், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்டவை குறித்து ஆபரேஷன்... மேலும் பார்க்க

விமானத்தில் அதிர்ஷ்டமான இருக்கையாக 11ஏ மீண்டும் நிரூபணம்! ஏன்? எப்படி?

அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 242 பேரில் 241 பேரும் பலியாக, ஒரே ஒருவர் உயிர் பிழைத்தார்.நிச்சயம், ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அறிந்... மேலும் பார்க்க

பேரழிவுக் காட்சிகளால் வேதனை! மோடி

விமான விபத்து நடைபெற்ற இடத்தின் பேரழிவுக் காட்சிகள் வேதனை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தை இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி நேரில்... மேலும் பார்க்க

விமான விபத்து: உயர்நிலை குழுவுடன் மோடி ஆலோசனை!

அகமதாபாத்தில் விமான விபத்து குறித்து உயர்நிலை குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தை இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு ... மேலும் பார்க்க