செய்திகள் :

பாஜகவின் தோ்தல் வெற்றியை கொண்டாடுகிறது காங்கிரஸ்- பினராயி விஜயன் தாக்கு

post image

பாஜகவின் தோ்தல் வெற்றியை கொண்டாடும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது காங்கிரஸ் என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் விமா்சித்தாா்.

தில்லி பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மியின் தோல்விக்கு காங்கிரஸும் ராகுல் காந்தியுமே காரணம் என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

இது தொடா்பாக திருவனந்தபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய மாணவா் சங்க (எஸ்எஃப்ஐ) மாநாட்டில் பினராயி விஜயன் பேசியதாவது:

பாஜகவுக்கு எதிராக பிற கட்சிகளுடன் இணைந்து போராடும் தனது உறுதிப்பாட்டில் இருந்து காங்கிரஸ் விலகிவிட்டது. காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பில்லாத தில்லியில் ஆம் ஆத்மிக்கு எதிரான பிரசாரத்தை ராகுல் காந்தி தலைமை ஏற்று மேற்கொண்டாா். இது, பாஜகவின் வெற்றிக்கு வழிவகுத்தது.

தில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 65-இல் காங்கிரஸ் வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனா். ஆனால், பாஜகவிடம் ஆம் ஆத்மி தோற்றதை காங்கிரஸாா் கொண்டாடினா். பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சி, இப்போது பாஜகவின் வெற்றியை கொண்டாடும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. மகாராஷ்டிரம், ஹரியாணாவிலும் காங்கிரஸின் தவறான அரசியல் அணுகுமுறையால் பாஜக வென்றது.

மக்களவைத் தோ்தலில் பாஜகவின் மூன்றில் இருபங்கு வெற்றிக் கனவை சிதைத்த ‘இண்டி’ கூட்டணியை காங்கிரஸ் இப்போது கைவிட்டுவிட்டது என்றாா் அவா்.

ரேபரேலியில் கட்சித் தொண்டர்களுடன் ராகுல் சந்திப்பு!

2027 சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேயிலில் இரண்டு பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் விபத்து: 5 பேர் பலி

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் வாரணாசி அருகே இன்று(வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளானதில் கர்நாடகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடகத்தின் பிதர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 ... மேலும் பார்க்க

கார் விபத்தில் இறந்தவர்களின் உடல்கூறாய்வில் அதிர்ச்சி! கொலையா?

அண்மைக் காலமாக, தொழிலதிபர்கள் குடும்பத்துடன் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொல்கத்தாவில் வேகமாகச் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில், அது விபத்து அல்ல கொலை, தற்கொலை என வ... மேலும் பார்க்க

தில்லி கூட்ட நெரிசல்: எக்ஸ் தளத்தில் விடியோக்களை நீக்க ரயில்வே அமைச்சகம் உத்தரவு!

புது தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது தொடர்பான விடியோக்களை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்குமாறு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா க... மேலும் பார்க்க

வயதான தாயை வீட்டில் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் கும்பமேளா சென்ற மகன்!

வயதான தாயை வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் புனித நீராடச் சென்ற மகன் பற்றிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.வீட்டுக்குள் இருந்த உணவு தீர்ந்துவிட்டதால் பசியால் அழுத மூதாட்டியின் சப்... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் செல்ல முடியாத சிறைக் கைதிகளுக்கு.. உ.பி. அரசு சிறப்பு ஏற்பாடு!

உத்தரப் பிரதேசத்தி்ன், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியாத சிறைக் கைதிகளுக்கு உ.பி. அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக சிறைத்துறை அமைச்சர் தாரா சிங் சௌகான் க... மேலும் பார்க்க