செய்திகள் :

'பாரத் ஜோடோ விவாஹா’ என்ற பெயரில் திருமண அழைப்பிதழ்! சோனியா, ராகுலுக்கு அழைப்பு!

post image

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையால் (இந்திய ஒற்றுமை நடைப்பயணம்) ஈர்க்கப்பட்ட மணமக்கள், தங்கள் திருமண அழைப்பிதழை பாரத் ஜோடோ விவாஹா என்ற பெயரில் அச்சிட்டுள்ளனர்.

இந்த அழைப்பிதழை சமூக ஊடகத்தில் பகிர்ந்து, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

2024 மக்களவைத் தேர்தலையொட்டி, கடந்த 2022ஆம் ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரை என்ற நடைப்பயணத்தை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடத்தினார். இந்த நடைப்பயணத்தின் போது இளைஞர்கள், பெண்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களிடமும் கலந்துரையாடியது பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், பாரத் ஜோடோ யாத்திரையால் ஈர்க்கப்பட்ட மணமக்கள் இருவர் தங்களின் திருமண அழைப்பிதழை பாரத் ஜோடோ விவாஹா (இந்திய ஒற்றுமைக்கான திருமணம்) என்ற பெயரில் அச்சிட்டுள்ளனர்.

ஜம்மு மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அபிலாஷா கோட்வால் மற்றும் பஞ்சாப் மற்றும் கேரளத்தை பூர்விகமாக கொண்ட வினல் வில்லியம் ஆகியோரின் திருமணம் பிப். 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

அவர்கள் பாரத் ஜோடோ விவாஹா என்ற பெயரில் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள அழைப்பிதழில் சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காவை குறிப்பிட்டு,

“இந்தியாவின் ஒற்றுமை, நீதி மற்றும் ஆன்மாவுக்கான உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருந்து வருகிறது. உங்கள் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, அதே மதிப்புகளை உள்ளடக்கிய நாங்கள் இணையும் விழாவைக் கொண்டாட உங்களை நான் பணிவுடன் அழைக்கிறேன்.

காதலுக்கான எல்லைகளைத் தாண்டி, நம்பிக்கைகள் ஒன்றிணைந்து, பன்முகத்தன்மை கொண்டதாக எங்களின் இந்திய ஒற்றுமைக்கான திருமணம் இருக்கும்.

இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு எங்களை ஆசிர்வதித்தால் மகிழ்ச்சியாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இரவில் பெண்ணுக்கு மோசமான குறுந்தகவல் அனுப்புவது குற்றம்: நீதிமன்றம்

இரவு நேரத்தில் பெண்ணுக்கு தவறான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அனுப்புவது குற்றம் என்று மும்பை அமர்வு நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.இரவு நேரத்தில் அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு “நீ ஒல்லியாக, புத்த... மேலும் பார்க்க

எதிர்பாராத கேள்விகளுடன் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு இயற்பியல் வினாத்தாள்!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.அதில், இயற்பியல் பாடத்துக்கான தேர்வு இன்று நடைபெற்றது. அறிவியல் பாடப்பிரிவில... மேலும் பார்க்க

நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா?

பெயர்கள் என்பது ஒரு நபரின் முக்கிய அடையாளமாகிவிட்டது. அந்த வகையில், ஒரு பெயரில் பல பேர் இருப்பார்கள். ஆனால் நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயராக இருப்பது பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியில் புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர் ரேகா குப்தா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். தில்லியின் நான்காவது பெண் முதல்வரான ரேகா குப்தாவும், அவருடன் ஆறு அமைச்சர்களும் வியாழக்க... மேலும் பார்க்க

சம்பாஜி மகாராஜா குறித்து சர்ச்சை கருத்து: விக்கிபீடியா ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு!

சம்பாஜி மகாராஜா குறித்த ஆட்சேபணைக்குரிய தகவலை நீக்காமல் வைத்திருந்ததற்காக விக்கிபீடியா ஆசிரியர்கள் 4 பேர் மீது மகாராஷ்டிர சைபர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக... மேலும் பார்க்க

ரேபரேலியில் கட்சித் தொண்டர்களுடன் ராகுல் சந்திப்பு!

2027 சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேயிலில் இரண்டு பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க