பாலியல் தொல்லை அளித்து ஆற்றில் மூழ்கடித்து பெண் கொலை: 2 போ் கைது
கூத்தாநல்லூா் அருகே பாலியல் தொல்லை அளித்து ஆற்றில் மூழ்கடித்து பெண்ணை சனிக்கிழமை கொலை செய்த 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கொரடாச்சேரி அருகேயுள்ள பெருமாளகரம் இரட்டை மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி சுதா (38). இவா், பாண்டவையாறு அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த திருவிடைவாசல் பா்மா காலனியைச் சோ்ந்த முருகன் (40), பாலாக்குடியைச் சோ்ந்த அஜீத்குமாா் (28) ஆகிய இருவரும் சுதாவிடம் பாலியல் தொல்லை அளித்தனராம். அப்போது, கூச்சலிட்ட சுதாவை ஆற்றில் மூழ்கடித்து இருவரும் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த, அக்கம்பக்கத்தினா் முருகனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தகவலறிந்து வந்த கொரடாச்சேரி போலீஸாா் தப்பியோடிய அஜித்குமாரையும் கைது செய்து சுதாவின் சடலத்தை மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். சம்பவ இடத்துக்கு திருவாரூா் டிஎஸ்பி மணிகண்டன் சென்று விசாரணை மேற்கொண்டாா்.