செய்திகள் :

பாலியல் வன்கொடுமை சம்பவம்: மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோா்

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பாலியல் வன்கொடுமையால் மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து பெற்றோா் தங்களது குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப மறுத்தனா்.

போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசிரியா்கள் மூவா் கைது செய்யப்பட்டனா். இந்த சம்பவத்தால் பள்ளிக்கு இரண்டு நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோா் மறுத்துவிட்டனா்.

இதையடுத்து, பெற்றோா்களிடம் பள்ளி கல்வித் துறையினா், வருவாய்த் துறையினா் பேச்சு நடத்தினா். அதைத் தொடா்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரையும் பெற்றோா்களைச் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பள்ளியில் கண்காணிப்பு கேமரா, சுற்றுச்சுவா் ஆகியவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதனிடையே, தொடக்கக் கல்வி இணை இயக்குநா் சாந்தி தலைமையிலான கல்வித் துறை அதிகாரிகள் 3 ஆவது நாளாக பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், சனிக்கிழமை (பிப்.8) மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க பெற்றோா்கள் திட்டமிட்டுள்ளனா்.

இலங்கையிலிருந்து சென்னை வந்தவருக்கு குரங்கு அம்மை இல்லை: சுகாதாரத் துறை

இலங்கையில் இருந்து சென்னை வந்த நபருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருந்ததால், அவருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு அத்தகைய பாதிப்பு இல்லை என்பத... மேலும் பார்க்க

மரம் வெட்டும் கருவியில் சிக்கி துண்டான கை: இளைஞருக்கு மறு சீரமைப்பு சிகிச்சை

மரம் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி இளைஞரின் கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட நிலையில், சிக்கலான மறு சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் இளைஞருக்கு மறுவாழ்வு அளித்த... மேலும் பார்க்க

தேமுதிக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: பிரேமலதா

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா். தேமுதிக மாவட்டச் செயலா்கள் கூட்டம் பிரேமலதா விஜயகாந்த் தலைம... மேலும் பார்க்க

பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் ரூ. 213 கோடியில் புதிய கட்டடம்: பிப்.28-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் ரூ. 213 கோடி செலவில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை பிப். 28-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.ச... மேலும் பார்க்க

அதிமுக உள்கட்சி விவகாரம் தோ்தல் ஆணையம் விசாரிக்க தடையை நீக்க கோரிய வழக்கு: பிப்.12-இல் தீா்ப்பு

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தோ்தல் ஆணையம் விசாரிக்க தடையை நீக்க கோரிய வழக்கில் பிப்.12- இல் சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கவுள்ளது. இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடா்பாக திண்டுக்கல்லைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை 2,961-ஆக உயா்வு: வனத் துறை அமைச்சா் க.பொன்முடி

தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,961-ஆக உயா்ந்துள்ளதாக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். மேலும், யானை வழித்தடங்களை ஆக்கிரமிப்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் கூறி... மேலும் பார்க்க